சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

தொடர் தோல்விகளின் எதிரொலி - இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அமைச்சர் அலி சப்ரி அழைப்பு

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தை முன்னெப்போதையும் விட வலுவாகவும், வெற்றிகரமானதாகவும் மாற்றுவதற்கு நாம் ஒன்றுபட்டு தீர்க்கமாகச் செயல்படுவோம்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய விளையாட்டுச் சட்டம், அரசியலமைப்புடன் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சரும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

2024 டி 20 உலகக் கிண்ணமானது அமெரிக்காவில் ஆரம்பமாகி தற்சமயம் நடைபெற்று வருகிறது.

இதில் இரண்டு போட்டிகளை மாத்திரம் எதிர்கொண்ட இலங்கை அணி, அந்த இரு போட்டிகளிலும் படுதோல்வியை தழுவியுள்ளதுடன், மோசமான செயல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது.

நியூயோர்க்கில் ஜூன் 3 அன்று நடைபெற்ற தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் 77 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அதேநேரம் இன்று டல்லாஸில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்களாதேஷிடம் 2 விக்கெட்டுகளினால் வீழ்ந்தது.

அது மாத்திரமல்லாது டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதான நெதர்லாந்துடனான பயிற்சி ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது. இவ்வாறான நிலையிலேயே அமைச்சர் அலி சப்ரி, தனது எக்ஸ் தளத்தில் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.

அதில் அது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர்,

கிரிக்கெட் என்பது இலங்கையின் இதயத்துடிப்பாகும், இது நமது தேசத்திற்கு புன்னகையையும், பெருமையையும், ஒற்றுமையையும் கொண்டு வந்த ஒரு விளையாட்டாகும்.

எங்களது வெற்றிகள், குறிப்பாக உலகக் கிண்ண வெற்றி, அனைத்து இலங்கையர்களின் இதயங்களிலும் மறக்க முடியாத நினைவுகளை பதித்துள்ளது.

எனினும் கூட இன்று, நமது நேசத்துக்குரிய விளையாட்டு நெருக்கடியில் உள்ளது, ஒரு அவசர மற்றும் விரிவான மறுசீரமைப்புக்கு அழைப்பு விடுக்கும் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

2023 ஐசிசி உலகக் கிண்ணம் மற்றும் ஐசிசி டி20 ஆகியவற்றில் சமீபத்திய ஏமாற்றங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்ல. அவை நமது கிரிக்கெட் உள்கட்டமைப்பிற்குள் ஆழமாக வேரூன்றியிருக்கும் பிரச்சினைகளின் அப்பட்டமான எடுத்துக்காட்டு.

இந்தச் சிக்கல்களைத் தற்காலிகத் திருத்தங்களால் தீர்க்க முடியாது. நமது கிரிக்கெட்டை தனிப்பட்ட நிறுவனமாக மாற்றியவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் துணிச்சலான, தொழில்முறை அணுகுமுறைதான் நமக்குத் தேவை.

நமது கிரிக்கெட்டின் நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் என்ற வகையில், சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவையை என்னால் சான்றளிக்க முடியும்.

மேலும் புதிய சட்டத்தின் மூலம் இந்த முக்கியமான மாற்றங்களைச் செயல்படுத்தும் விளிம்பில் இப்போது இருக்கிறோம். இலங்கை கிரிக்கெட்டுக்கு இது ஒரு தீர்க்கமான தருணம்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய விளையாட்டுச் சட்டம் மற்றும் அரசியலமைப்புடன் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும்.

இலங்கையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டோ வியாபாரமோ அல்ல; இது நமது தேசிய உணர்வின் பிரதிபலிப்பாகும். நமது வெற்றியை நிதி அளவீடுகளால் அளக்காமல், களத்தில் நாம் அடையும் வெற்றிகள் மற்றும் நம் மக்களிடம் உள்ள நம்பிக்கையை வைத்து அளவிட வேண்டும்.

தற்போது, எங்களின் செயல்திறன் ஏற்கத்தக்கதாக இல்லை, மாற்றத்திற்கான நேரம் இப்போது வந்துவிட்டது எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 668
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads