சினிமா செய்திகள்
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார். அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் வி
நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்தத
மனைவியை விவகாரத்து செய்கிறார் நடிகர் ஜெயம் ரவி
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்ட
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்க
Ads
 ·   ·  7908 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தியானத்தில் இருந்து கொண்டே புயல் பாதிப்புகளை கேட்டறிந்த பிரதமர் மோடி

மக்களவை தேர்தல் நாளையோடு முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களை முடித்த பிரதமர் மோடி நேற்று மாலை தமிழ்நாட்டின் கன்னியாக்குமரியை வந்தடைந்தார். அங்கு கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று தொடங்கி நாளை பிற்பகல் வரை 3 நாட்களுக்கு தீவிர தியானம் மேற்கொள்கிறார். நேற்று முதலாக அவர் தியானம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த 2 மணி நேரம் முன்பாக பிரதமர் மோடியின் எக்ஸ் தளத்தில் ரேமல் புயல் குறித்த பதிவு வெளியாகியுள்ளது. அதில் “துரதிருஷ்டவசமாக, அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ரெமல் புயலுக்குப் பிறகு இயற்கை பேரழிவுகளைச் சந்தித்துள்ளன. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அங்கு பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளன. நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்து மாநிலங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் செய்ய மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மற்றும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவில் கமெண்ட் செய்து வரும் பலரும் நேற்று மாலையே தியானத்தில் ஆழ்ந்துவிட்ட பிரதமர் மோடி 2 மணி நேரம் முன்னதாக புயல் பாதிப்பை கேட்டறிந்தது எப்படி? பதிவிட்டது எப்படி? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் மணிப்பூர் கலவரத்தின்போது அதுகுறித்து பிரதமர் மோடி பேசாமல் இருந்ததாகவும், தற்போது புயலுக்காவது மணிப்பூரின் பெயரை குறிப்பிட்டுள்ளார் என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர். பிரதமர் மோடி தியானத்தில் உள்ள சமயத்தில் வெளியாகியுள்ள இந்த பதிவு வைரலாகியுள்ளது.

இதுகுறித்து பாஜகவினர் சிலர் கூறும்போது, “பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகளை நேரடியாக அவர்கள் பதிவிடுவது இல்லை. அதற்கென சிலர் பணிபுரிகின்றனர். பிரதமர் மோடி நேற்று தியானத்திற்கு செல்வதற்கு முன்னரே புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்திருக்கலாம். அதை தாமதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கலாம்” என கருத்து தெரிவித்துள்ளனர்.

  • 718
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads