சினிமா செய்திகள்
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும்
எனக்குத் திருப்புமுனை தந்த படம் - நடிகர் சார்லி
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
Ads
 ·   ·  2994 news
  •  ·  1 friends
  • 2 followers

சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் - ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு பணிப்பு

 

சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு  பணிப்புரை விடுத்துள்ளது.

நேற்று சனிக்கிழமை உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு  இடம் பெற்றபோது, சமூகமட்ட பிரதிநிதி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்ட நிலையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சுன்னாக நிலத்தடி நீரில் நொதேன் பவர் தனியார் நிறுவனத்தினால் வெளியேற்றப்படுகின்ற கழிவு எண்ணெய் நிலத்துக்கு கீழ் இறக்கப்பட்ட நிலையில் மக்களின் குடிநீர் கிணறுகள் தொடக்கம் விவசாய கிணறுகள் வரை கழிவு எண்ணெய் தாக்கம் உணரப்பட்டது.

சிலர் அதனை மறுத்து வந்த போதும் இறுதியில் உண்மை கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சுன்னாக பிரதேச மக்களின் குடிநீர் கிணறுகள் தொடர்பில் என்ன நிலைப்பாடு இருக்கிறது என்பது தொடர்பில் மக்களுக்கு தெரியாது.

ஏனெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் கிணறுகள் தொடர்பான பரிசோதனை அறிக்கைகளை எடுத்ததாக நாங்கள் அறியவில்லை.

அது மட்டுமல்லாது மருதனார் மடப் பகுதியில் அமைந்துள்ள வாகனங்கள் சுத்திகரிக்கும் நிலையத்தில் அதிகளவிலான அரச நிறுவனங்களின் வாகனங்கள் சுத்திகரிப்பு இடம்பெறுகின்றது.

குறித்த சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி வளமான விவசாய நிலங்களைக் கொண்ட பகுதியாக காணப்படுகின்ற பகுதியில் குறித்த சுத்திகரிப்பு நிலையத்தின் எண்ணெய் கழிவுகள் அங்கு செல்கின்றது என்பது தொடர்பில் எமக்கு ஏதும் தெரியாது.

இவ்வாறான நிலையில் முன்பு ஏற்பட்ட பாரியாய அனர்த்தம் போன்று எதிர்காலத்தில் கழிவு எண்ணெயினால் ஏற்படும் ஆபத்தை தவிர்ப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அபிவிருத்தி குழு தலைவர் - சுன்னாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் தாக்கம் தொடர்பில் நான் நன்கு அறிவேன்.

ஆகையால் பொதுமக்களின் குற்றச்சாட்டு தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கும் நிலையில் நீர்வளங்கள் சபை அதிகாரிகள் சுன்னாணாகப் பகுதியில் உள்ள 5 குடி நீர் கிணறுகளின் நீர் மாதிரிகளில் எண்ணெய் படலம் இருக்கிறதா என்பது தொடர்பில் பரிசோதனை அறிக்கையை பிரதேச அபிவிருத்தி குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.

அதேபோன்று வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் எவ்வாறு வெளியேற்றப்படுகிறது என அறிக்கை சமர்ப்பிப்பதோடு சுற்றாடல் அதிகார சபையினால் குறித்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிகள் தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உடுவில் பிரதேச சபைச் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் திணைக்களத் தலைவர்கள் கிராம சுவையாளர்கள் சமூகமட்ட பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

00

  • 661
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads