சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

பிரதேச சபை தேர்தலில் கூட மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுவது எதற்கு - ரங்கேஸ்வரன் கேள்வி!

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மக்களுக்கு வழி காட்டுவதற்கு முன்னர் மக்கள் ஆணையை பெற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் அதைவிடுத்து மக்களை பகடைகளாக பயன்படுத்தி பணப்பட்டி அரசியல் செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடாக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -

தமிழ் கட்சிகள் சில எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களம் இறக்கப் போகிறோம் என ஆங்காங்கே கூடிப் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்வதாக வாக்குறுதி கொடுத்து அபிவிருத்திக்கென பல கோடி ரூபாய்களை பெற்றுள்ளனர்.

மறுபுறம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை பொது வேட்பாளராக களம் இறங்க கேட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பின்னர் தான் அவ்வாறு கேட்கவில்லை என சுரேஷ் பதில் அறிக்கை வழங்கியதையும் ஊடகங்களில் பார்த்தேன்.

ஆனால் 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுரேஷ் பிரேமச் சந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். குறிப்பாக பிரதேச சபை தேர்தலில் கூட அவரது அணியினரை மக்கள் முழுமையாக புறக்கணித்து ஓரங்கட்டி விட்டனர்.

இதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஆணை கிடைத்தது வரும் நிலையில் மக்கள் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு எமக்கு மக்கள் ஆணையுள்ளது.

இந்நிலையில் இப்போது பொது வேட்பாளர் என்ற விடயத்தை கையிலெடுத்துள்ள தரப்பினர்  மக்களை குழப்பி பணப்பட்டி அரசியலை மேற்கொள்ள வா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மக்களுக்கு வழி காட்டுவதற்கு முன்னர் மக்கள் ஆணையை பெறுவது அவசியம். அதைவிடுத்து மக்களை பகடைகளாக பயன்படுத்தி தொடர்ந்தும் பணப்பட்டி அரசியல் செய்யக்கூடாது எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 495
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads