சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  1293 news
  •  ·  0 friends
  • 1 followers

நிறைவுக்கு வந்தது இரண்டு தசாப்த ஆட்சி - பதவி விலகினார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்

சிங்கப்பூரில் நீண்ட காலம் பிரதமராக இருந்த லீ சியென் லூங் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 20 ஆண்டு காலம் பிரதமராக இருந்த அவரின் ஆட்சிகாலம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் இன்றிரவு (15.05.2024) லீயிடம் இருந்து முறைப்படி ஆட்சியை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1965 ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து சிங்கப்பூரில் மூன்று பிரதமர்கள் மட்டுமே ஆட்சிசெய்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆளும் மக்கள் செயல் கட்சியைச் (PAP) சேர்ந்தவர்கள் ஆவர்.

எவ்வாறாயினும், லீ மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், லீ குடும்பத்தின் நிழலில் இருந்து வெளியேறும் சிங்கப்பூரின் அரசியல் தலைமையின் பரிணாமத்தை இந்த மாற்றம் சமிக்ஞை செய்கிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதமர் என்ற முறையில் வார இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட லீ சியென் லூங், சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

"எல்லோரையும் விட நான் வேகமாக ஓட முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் ஓட வைக்க முயற்சித்தேன்," என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார். "நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம்." என்றும் கூறியுள்ளார்.

தனது முன்னோடிகளிடம் இருந்து வேறுபட்ட வகையில் பணிகளை முன்னெடுக்க முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

லீ சியென் லூங் 1984 ஆம் ஆண்டு தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே பின்வரிசை உறுப்பினராக அரசியலில் இணைந்தார். 2004 ஆம் ஆண்டு தலைமையேற்கும் முன் சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமர் கோவின் கீழ் அவர் பதவி உயர்வு பெற்றார்.

அவரது அரசியல் வாழ்க்கையின் முதல் வருடங்கள் தவிர்க்க முடியாத தீவிரமான விமர்சகர்களை எதிர்கொண்டார். எனினும், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிங்கப்பூரின் தலைவராக லீ தனது முத்திரையை பதித்தார்.

அவரின் ஆட்சியின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ந்ததுடன், சர்வதேச நிதி சக்தியாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது.

அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

பல மந்தநிலைகள், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோய்களின் போது நாட்டைத் திறமையாக வழிநடத்திய பெருமை லீயின் அரசாங்கத்திற்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது

000

  • 491
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads