சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  897 news
  •  ·  0 friends
  • 1 followers

நிறைவுக்கு வந்தது இரண்டு தசாப்த ஆட்சி - பதவி விலகினார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்

சிங்கப்பூரில் நீண்ட காலம் பிரதமராக இருந்த லீ சியென் லூங் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 20 ஆண்டு காலம் பிரதமராக இருந்த அவரின் ஆட்சிகாலம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் இன்றிரவு (15.05.2024) லீயிடம் இருந்து முறைப்படி ஆட்சியை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1965 ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து சிங்கப்பூரில் மூன்று பிரதமர்கள் மட்டுமே ஆட்சிசெய்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆளும் மக்கள் செயல் கட்சியைச் (PAP) சேர்ந்தவர்கள் ஆவர்.

எவ்வாறாயினும், லீ மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், லீ குடும்பத்தின் நிழலில் இருந்து வெளியேறும் சிங்கப்பூரின் அரசியல் தலைமையின் பரிணாமத்தை இந்த மாற்றம் சமிக்ஞை செய்கிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதமர் என்ற முறையில் வார இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட லீ சியென் லூங், சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

"எல்லோரையும் விட நான் வேகமாக ஓட முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் ஓட வைக்க முயற்சித்தேன்," என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார். "நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம்." என்றும் கூறியுள்ளார்.

தனது முன்னோடிகளிடம் இருந்து வேறுபட்ட வகையில் பணிகளை முன்னெடுக்க முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

லீ சியென் லூங் 1984 ஆம் ஆண்டு தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே பின்வரிசை உறுப்பினராக அரசியலில் இணைந்தார். 2004 ஆம் ஆண்டு தலைமையேற்கும் முன் சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமர் கோவின் கீழ் அவர் பதவி உயர்வு பெற்றார்.

அவரது அரசியல் வாழ்க்கையின் முதல் வருடங்கள் தவிர்க்க முடியாத தீவிரமான விமர்சகர்களை எதிர்கொண்டார். எனினும், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிங்கப்பூரின் தலைவராக லீ தனது முத்திரையை பதித்தார்.

அவரின் ஆட்சியின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ந்ததுடன், சர்வதேச நிதி சக்தியாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது.

அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

பல மந்தநிலைகள், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோய்களின் போது நாட்டைத் திறமையாக வழிநடத்திய பெருமை லீயின் அரசாங்கத்திற்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது

000

  • 469
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads