சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  8178 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் தொடரும் - மின்சாரத்துறை அமைச்சர்

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாட்டை இடைநிறுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய செயற்படுவீர்களா ?அல்லது மறுசீரமைப்புக்களை தொடர்வீர்களா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல மின்சாரத்துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.ஆகவே மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் தொடரும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல,

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல்,மறுசீரமைத்தல் என்பதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை முழுமையாக இடைநிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அத்துடன் இந்த நடவடிக்கைகளை அடுத்த அரசாங்கத்துக்கு பொறுப்பாக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஆகவே மின்சாரத்துறை அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவாரா ?அல்லது மறுசீரமைப்புக்களை முன்னெடுத்துச் செல்வாரா என கேள்வியெழுப்பினார். இதற்கு எழுந்து பதிலளித்த மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் குறிப்பிடவில்லை.மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.ஆகவே மறுசீரமைப்புக்கள் தொடரும் என்றார்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய லக்ஷ்மன் கிரியெல்ல, அனைத்து கேள்விகளுக்கும் கேலிக்கையாக பதிலளிக்க வேண்டாம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டாம்,தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்துங்கள்,புதிய மக்களாணையுடன் பணிகளை முன்னெடுக்கலாம்' என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.நான் அறிக்கையை முழுமையாக வாசித்தேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றை குறிப்பிடுகிறார், தற்போதைய ஜனாதிபதி பிறிதொன்றை குறிப்பிடுகிறார்.நீங்கள் எந்த பக்கம், (மின்சாரத்துறை அமைச்சரை நோக்கி) இவர் இடைநடுவில் இருப்பதை அறிவோம்.மறுசீரமைப்புக்களை மக்களாணை பெறும் புதிய அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார் என்றார்.

  • 502
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads