சினிமா செய்திகள்
“லப்பர் பந்து" வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம் - ஹரிஷ் கல்யாண்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்திற்கு என்கவுண்ட்டர் போலீஸ் வேடம்
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ர
விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவர்களது வாழ்
வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
Ads
 ·   ·  7943 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் தொடரும் - மின்சாரத்துறை அமைச்சர்

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாட்டை இடைநிறுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய செயற்படுவீர்களா ?அல்லது மறுசீரமைப்புக்களை தொடர்வீர்களா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல மின்சாரத்துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.ஆகவே மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் தொடரும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல,

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல்,மறுசீரமைத்தல் என்பதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை முழுமையாக இடைநிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அத்துடன் இந்த நடவடிக்கைகளை அடுத்த அரசாங்கத்துக்கு பொறுப்பாக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஆகவே மின்சாரத்துறை அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவாரா ?அல்லது மறுசீரமைப்புக்களை முன்னெடுத்துச் செல்வாரா என கேள்வியெழுப்பினார். இதற்கு எழுந்து பதிலளித்த மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் குறிப்பிடவில்லை.மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.ஆகவே மறுசீரமைப்புக்கள் தொடரும் என்றார்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய லக்ஷ்மன் கிரியெல்ல, அனைத்து கேள்விகளுக்கும் கேலிக்கையாக பதிலளிக்க வேண்டாம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டாம்,தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்துங்கள்,புதிய மக்களாணையுடன் பணிகளை முன்னெடுக்கலாம்' என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.நான் அறிக்கையை முழுமையாக வாசித்தேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றை குறிப்பிடுகிறார், தற்போதைய ஜனாதிபதி பிறிதொன்றை குறிப்பிடுகிறார்.நீங்கள் எந்த பக்கம், (மின்சாரத்துறை அமைச்சரை நோக்கி) இவர் இடைநடுவில் இருப்பதை அறிவோம்.மறுசீரமைப்புக்களை மக்களாணை பெறும் புதிய அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார் என்றார்.

  • 428
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads