சினிமா செய்திகள்
“லப்பர் பந்து" வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம் - ஹரிஷ் கல்யாண்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்திற்கு என்கவுண்ட்டர் போலீஸ் வேடம்
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ர
விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவர்களது வாழ்
வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
Ads
 ·   ·  1438 news
  •  ·  0 friends
  • 1 followers

உரிய முறையில் விசாரணை இல்லையோல் எந்த ஒரு அரச விடுதிகளிலும் தாங்க முடியாது - ரூபினி வரதலிங்கம் காட்டமான கடிதம்

வடக்கில் இருந்து சென்ற கல்வி அதிகாரிகள் இரத்மலானை அரச விடுதியில் மது அருந்திய விவகாரம் தொடர்பில் முறையான விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை 13 அரச உத்தியோகத்தர்களும் வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் மேற்பார்வையில் உள்ள எந்த ஒரு அலுவலகத்திலும் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வட மாகாண பிரதம செயலாளர் நிர்வாகம் ரூபினி வரதலிங்கம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில்  -  மேற்படி விடயம் தொடர்பான தங்களது NP/03/02/GA/1/Inquiry ஆம் இலக்க 2024.04.08 ஆம் திகதிய கடிதம் தொடர்பானது,

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக்கோவையின் இரண்டாம் அத்தியாயத்தின் 13 ஆம் பிரிவிற்கமைய ஆரம்ப புலனாய்வு என்பது "எவரேனும் அரச அலுவலர் அல்லது அலுவலர்கள் துர்நடத்தையொன்றில் ஈடுபட்டதாக சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கும்போது

அல்லது அது பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் அது தொடர்பிலான உண்மையான விபரங்களை வெளிப்படுத்துவதற்காக வேண்டிய அடிப்படை காரணிகளை தேடுதலும், சம்பந்தப்பட்ட நபர்களின் கூற்றுக்களையும் பதிவு செய்வதுடன் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பரிசீலனை செய்வதுமாகும்.

அதனடிப்படையில் தங்களினாலோ அல்லது மாகாண கல்வி பணிப்பாளரினாலோ குறித்த சம்பவத்திற்குரிய விசாரணைகள் எவையும் இது வரைகாலமும் மேற்கண்டவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

மேலும் மாகாண கல்வி பணிப்பாளர் அவர்களின் NP/20/Inquiry/2023 ஆம் இலக்க 2023.02.20 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள உத்தியோக பற்றற்ற விசாரணை என்பதன் ஊடாக குறிப்பிடப்படுவது யாது என்பதும் விளங்கிக்கொள்ள முடியாதுள்ளது.

மேலும் மாகாணக் கல்வி பணிப்பாளர் அவர்களின் NP/20/Inquiry/2023 ஆம் இலக்க 2023.02.20 ஆம் திகதிய கடிதமானது எமக்கு பிரதியிடப்படவில்லை என்பதுடன் தங்களினாலும் எமக்கு அறிக்கையிடப்படவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணையினை தாபன விதிக்கோவையின் இரண்டாம் அத்தியாயத்திற்கமைய மேற்கொண்டு அதனது அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் மாகாண கல்வி பணிப்பாளர் அவர்களினால் செயலாளர், கல்வி அமைச்சிற்கு முகவரியிடப்பட்ட

NP/20/Inquiry/2023 ஆம் இலக்க 2023.02.20 ஆம் திகதிய கடிதத்தில் முதலாவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள 13 ஆண் உத்தியோகத்தர்களும் உரிய அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் எமது அலுவலகத்தின் கீழ் இயங்கும் எந்தவொரு வதிவிடத்தினுள் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் ஆளுநரின் செயலாளர், ஆளுநர் செயலகம், வடக்கு மாகாணம். மாகாண கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி திணைக்களம்,  மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலகம் என்பவற்றிற்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 476
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads