சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் - அமைச்சர் அலி சப்ரி

சர்வதேச கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்றும் அப்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை சகல சர்வதேச நாடுகளுடனும் பிளவுபடாத வெளிவிவகார கொள்கையுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதே அரசாங்கத்தில் எதிர்பார்ப்பாகும்.

தேசிய வளங்களைப் பாதுகாத்து, அதன் உச்ச பயனை பெற்றுக் கொள்வதற்கு பிளவடையாத வகையில் வெளிவிவகார கொள்கையை செயற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஈரான் ஜனாதிபதி அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அந்த வகையில் அவரது வருகையின் பின்னர் இலங்கையின் வெளிவிவகார கொள்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

உமா ஓயா அபிவிருத்தி செயற்திட்டத்தை ஈரான் ஜனாதிபதி திறந்து வைத்ததுடன் அந்த திட்டத்தின் ஊடாக தேசிய மின்கட்டமைப்புக்கு 120 மெகாவோட் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நீர்மின் உற்பத்தி நடவடிக்கைகள் விரிவு படுத்தப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஜூலை மாதமளவில் மின்கட்டணத்தை மேலும் குறைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டின் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். ஈரானுக்கும், இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்க ஈரானிய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதனூடாக இலங்கையின் சுற்றுலாத்துறை கைத்தொழில் முன்னேற்றமடையும்.

.தேவேளை சவூதி அரேபியாவில் இடம்பெற்ற ‘உலக பொருளாதார பேரவை’ மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் அந்நாட்டின் வெளிவிவகாரம், முதலீடு மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிந்தது. இதன் பிரதிபலனாக சவூதி அரேபியாவுடன் ‘முதலீட்டு மேம்பாட்டு ஒப்பந்தம்’ ஒன்றை கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய வெளிவிவகா அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த வகையில் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஜப்பான் தலைமைத்துவம் வகிப்பது இலங்கைக்கு சாதகமாக காணப்படுகிறது.

கடன் மறுசீரமைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் எமக்கு உறுதியளித்துள்ளார். அத்துடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றதன் பின்னர் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்திட்ட ங்களை முன்னெடுக்க வேண்டும் என ஜப்பான் வலியுறுத்தியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 525
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads