சினிமா செய்திகள்
இணையத்தில் வைரலாகி வரும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீப
புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி
முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும்
நடிகை சுஜாதா
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
Ads
 ·   ·  7529 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் : இம்ரான் மஹ்ரூப்

கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுவரும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. செயலாளர் பதவிக்கு இதுவரை ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (02) இடம்பெற்ற ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் செயலாளர் பதவிக்கு இதுவரை எந்த முஸ்லிம் அதிகாரியும் நியமிக்கப்படவில்லை. கடந்த வருடம் ஜூன் மாத்தில் இதுதொடர்பாக வெளிக்கொண்டுவரப்பட்டபோதும் அந்த நடவடிக்கை இன்னும் செயற்படுத்தப்படாமல் இருக்கிறது. கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்த 5 அமைச்சுக்களில் 2 தமிழ் செயலாளர்களும் 2 முஸ்லிம் செயலாளர்களும் ஒரு சிங்கள செயலாளரும் பணியாற்றி வந்தார்கள். இன சமநிலையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை இடம்பெற்று வந்தது.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு அமைச்சிலும் முஸ்லிம் செயலாளர் ஒருவரேனும் இல்லாமை கவலைக்குரிய விடயமாகும். முதலமைச்சரின் அமைச்சு, சுகாதார அமைச்சு வீதி அபிவிருத்தி அமைச்சுகளுக்கு தமிழ் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று கல்வி அமைச்சு, விவசாய அமைச்சு ஆகியவற்றுக்கு சிங்கள செயலாளர்கள் மியமிக்கப்பட்டிருக்கின்றனர். இது இந்த மாகாணத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் கொச்சைப்படுத்துகின்ற செயலாகவே காண்கிறேன்.

எனினும் இந்த விடயத்தை அரசியல் தலைமைத்துவங்கள் கண்டுகொள்ளாத காரணத்தினால் கிழக்கு மாகாணத்திலே அண்மைக்காலமாக அரங்கேற்றப்படுகின்ற முஸ்லிம் விரோத போக்காகவே இதனை நாங்கள் காண்கிறோம். இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அதிகாரிகள் பணிபுரிய முடியாத நிலையே எதிர்காலத்தில் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

எனவே ரணில் ராஜபக்ஷ் ஆட்சியிலும் முஸ்லிம் விராேத போக்கு தொடர்ந்தும் இடம்பெற்று வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதனால் இது தொடர்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம் விழித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் பேசுகின்றவர்கள் என தெரிவிக்கக்கூடியவர்கள் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் , இது தொடர்பாக முஸ்லிம் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

  • 599
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads