சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  7800 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் : இம்ரான் மஹ்ரூப்

கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுவரும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. செயலாளர் பதவிக்கு இதுவரை ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (02) இடம்பெற்ற ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் செயலாளர் பதவிக்கு இதுவரை எந்த முஸ்லிம் அதிகாரியும் நியமிக்கப்படவில்லை. கடந்த வருடம் ஜூன் மாத்தில் இதுதொடர்பாக வெளிக்கொண்டுவரப்பட்டபோதும் அந்த நடவடிக்கை இன்னும் செயற்படுத்தப்படாமல் இருக்கிறது. கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்த 5 அமைச்சுக்களில் 2 தமிழ் செயலாளர்களும் 2 முஸ்லிம் செயலாளர்களும் ஒரு சிங்கள செயலாளரும் பணியாற்றி வந்தார்கள். இன சமநிலையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை இடம்பெற்று வந்தது.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு அமைச்சிலும் முஸ்லிம் செயலாளர் ஒருவரேனும் இல்லாமை கவலைக்குரிய விடயமாகும். முதலமைச்சரின் அமைச்சு, சுகாதார அமைச்சு வீதி அபிவிருத்தி அமைச்சுகளுக்கு தமிழ் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று கல்வி அமைச்சு, விவசாய அமைச்சு ஆகியவற்றுக்கு சிங்கள செயலாளர்கள் மியமிக்கப்பட்டிருக்கின்றனர். இது இந்த மாகாணத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் கொச்சைப்படுத்துகின்ற செயலாகவே காண்கிறேன்.

எனினும் இந்த விடயத்தை அரசியல் தலைமைத்துவங்கள் கண்டுகொள்ளாத காரணத்தினால் கிழக்கு மாகாணத்திலே அண்மைக்காலமாக அரங்கேற்றப்படுகின்ற முஸ்லிம் விரோத போக்காகவே இதனை நாங்கள் காண்கிறோம். இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அதிகாரிகள் பணிபுரிய முடியாத நிலையே எதிர்காலத்தில் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

எனவே ரணில் ராஜபக்ஷ் ஆட்சியிலும் முஸ்லிம் விராேத போக்கு தொடர்ந்தும் இடம்பெற்று வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதனால் இது தொடர்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம் விழித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் பேசுகின்றவர்கள் என தெரிவிக்கக்கூடியவர்கள் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் , இது தொடர்பாக முஸ்லிம் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

  • 648
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads