சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  7519 news
  •  ·  5 friends
  • I

    9 followers

7,000 மருத்துவர்களின் உரிமங்கள் ரத்து செய்ய தீர்மானம்

வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஏறத்தாழ 7,000 பயற்சி மருத்துவர்களின் உரிமங்களை ரத்து செய்ய தென்கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வேலைக்குத் திரும்ப அவர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு புறக்கணிக்கப்பட்டதாக தென்கொரிய சுகாதாரத் துணை அமைச்சர் இன்று (4) தெரிவித்தார்.

தென்கொரியாவில் மருத்துவர் பற்றாக்குறைக்குத் தீர்வு காண மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்ததை அடுத்து, பிரச்சினை தலைதூக்கியது.முதலில் தங்கள் வருமானம், வேலைச் சூழல் ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் போர்க் கொடி உயர்த்தி வெளிநடப்புப் போராட்டத்தில் இறங்கினர்.

பிப்ரவரி 20ஆம் திகதியிலிருந்து ஏறத்தாழ 9,000 மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தென்கொரியாவில் உள்ள மொத்த மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களில் 70 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக தென்கொரிய மருத்துவமனைகளில் முக்கிய சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன. அந்நாட்டில் மருத்துவ நெருக்கடிநிலை ஏற்பட்டது.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இராணுவ மருத்துவர்களும் சமூக மருத்துவர்களும் அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். வெளிநடப்புப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு வேலைக்குத் திரும்புமாறு பயிற்சி மருத்துவர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. இதற்கிடையே, மருத்துவமனைகளுக்குச் சென்று அதிகாரிகள் சோதனை நடத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்குத் திரும்பாத பயிற்சி மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி இறுதிக்குள் வேலைக்குத் திரும்பாத பயிற்சி மருத்துவர்களுக்கு எதிராக நிர்வாக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தண்டனைகள் விதிக்கப்படக்கூடும் என்று தென்கொரிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அவர்களது உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்படக்கூடும் அல்லது சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படக்கூடும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது.

  • 266
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads