சினிமா செய்திகள்
சித்தார்த்தை மணக்கும் ஆதிதி
ஹைதராபாத்தில் பிறந்து மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இப்பொழுது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் அதிதி ராவ் ஹைதாரி.ந
மீண்டும் இணைகிறது "ஒரு நொடி" படக்குழு
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்தில் வெளியான "ஒரு நொடி"
பார்கின்சன் நோயால் அவஸ்தைப்பட்ட நடிகை காலமானார்
கேரள மாநிலம் மலையின்கீழு பகுதியை சேர்ந்தவர் கனகலதா. இவர் மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களிலும
அப்பா வயது நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை குட்டி ராதிகா
2003ம் ஆண்டு ஷாம் நடித்த இயற்கை படத்தில் குட்டி ராதிகா அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். அழகான அழுத்தமான காதலை சொன்ன இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓட
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் காலமானார்
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 வயதில் அவர் காலமாகினார்.உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய ப
இணையத்தில் வைரலாகி வரும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீப
புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி
முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும்
நடிகை சுஜாதா
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
Ads
 ·   ·  7537 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: சீதைக்கு 196 அடி பிரம்மாண்டமான சேலை

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

இதனிடையே, கும்பாபிஷேக விழாவுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ராமர் கோவில் மாதிரி வைர நெக்லஸ் செய்து பரிசாக கொடுக்க உள்ளார். குஜராத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 108 அடி நீளம் கொண்ட பெரிய ஊதுபத்தியை பரிசாக கொடுக்க உள்ளார். இதுபோல ஏராளமான பரிசுகள் ராம்ருக்கும், சீதைக்கும் தயார் செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளன.

அந்தவகையில், ஆந்திராவை சேர்ந்த நெசவாளர் நாகராஜு, சீதைக்காக 196 அடி புடவையை நெய்துள்ளார். அந்த சேலையில், 13 மொழிகளில் 32,200 முறை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வார்த்தை எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி நடக்கவுள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்த அழகான புடவையை பரிசளிக்க நாகராஜு திட்டமிட்டுள்ளார்.

ராமாயணத்தில் வரும் பல காட்சிகள் இந்த சேலையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த தனித்துவமான சேலை "ராம கோடி வஸ்த்ரா" என்ற சிறப்பு துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மராத்தி, உருது, மலையாளம். ஒடியா போன்ற மொழிகளில் ஸ்லோகங்கள் புடவையில் நெய்யப்பட்ட்டுள்ளன. ராமாயணத்தில் ராமரின் வாழ்க்கைக் கதையிலிருந்து 168 படங்களும் இந்த சேலையில் இடம்பெற்றுள்ளன.

16 கிலோ எடையுள்ள இந்த சேலை சாதாரண சேலையை விட கிட்டத்தட்ட 11 மடங்கு கனமானது. தினமும் சுமார் 10 மணி நேரம் என ஆறு மாதங்கள் உழைத்து இந்தப் புடவையை நாகராஜு உருவாக்கியுள்ளார். கும்பாபிஷேக விழாவில் இந்த சேலையை வழங்க அனுமதிக்காக தற்போது காத்திருக்கும் நாகராஜு, ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அறக்கட்டளை உறுப்பினர்களிடமிருந்து அனுமதி கிடைத்ததும், இந்த சிறப்பு சேலையை வழங்குவதற்காக அயோத்திக்குச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

  • 285
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads