சினிமா செய்திகள்
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நள்ளிரவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மடக்கி பொதுமக்கள் வைத்த கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம்  லாந்தை கிராமத்திற்கு செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையை ஆள் உள்ள கேட்டாகவோ அல்லது மேம்பாலமாகவோ தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கிராமத்து மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை கிராமம் வழியாக செல்லும் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. லாந்தை, கண்ணணை,பெரிய தாமரைக்குடி, சின்னதாமரைக்குடி, திருப்பனை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளடக்கிய 600 குடும்பங்களை சேர்ந்த 2500 மக்கள் அந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், மழைக்காலத்தில் அந்த ரயில்வே சுரங்கப்பாதை நீரினால் மூழ்கி விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ரயில்வே சுரங்கபாதையால் தாங்கள் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாவதாகவும், அவசரகாலங்களில் நோயாளிகளை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கூட ஏற்றி செல்வதற்கு கூட சிரமப்படுவதாகவும், வெளியூரில் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இறந்த நபர்களை அடக்கம் செய்வதற்கு சிரமப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதனை சரி செய்யகோரிய அவர்களது நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்து அப்பகுதி கிராம மக்கள் மனு அளித்தனர். அதில், ரயில்வே சுரங்கப்பாதையை ஆள் உள்ள கேட்டாகவோ அல்லது மேம்பாலமாகவோ தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரியுள்ளனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மத்திய நிதி அமைச்சர் அவர்களுடைய கோரிக்கையை மத்திய ரயில்வே அமைச்சரிடம் கூறி அதற்கான பணிகளை விரைவாக செய்து தருகிறேன் என கிராம மக்களிடம் உறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து பாலத்தையும் பார்வையிட்டு சென்றார். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள லாந்தை, கண்ணனை உள்ளிட்ட கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

  • 128
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads