சினிமா செய்திகள்
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
Ads
 ·   ·  8226 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இராதாகிருஷ்ணன் விடுத்துள்ள வேண்டுகோள்

இலங்கை அரசாங்கத்துடன் ஒரு சுமுகமான உறவை பேனி இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பீர்கள் என எதிர்பார்ப்பதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக தாங்கள் நன்கு அறிந்தவர் என்ற வகையில் எங்களுடைய இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே, இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் ஒரு சுமுகமான உறவை பேனி அதற்கான தீர்வை பெற்றுக் கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



10 வருட நீண்ட கால போராட்டத்தின் பின்பு தி.மு.க தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதற்கு மலையக மக்களின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.



உங்களுடைய வெற்றி தமிழ் நாட்டு மக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் வழங்கியுள்ள வாக்குகளாகும். எனவே, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் உங்களுடைய ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கின்றது.



அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட ஒருவர் தமிழ் நாட்டில் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாராட்டிற்குறியது. முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இளைஞர் அணி செயலாளராக கட்சி தலைவராக படிப்படியாக வளர்ந்து வந்த ஒரு முதல்வர்.



அவருடைய தந்தையார் தமிழக மக்களுக்கு மட்டுமன்றி உலக தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் தலைமைத்துவம் கொடுத்தவர். அதனை உணர்ந்து ஸ்டாலின் செயற்பட வேண்டும்.



நீங்கள் தனியே தமிழ் நாட்டிற்கு மாத்திரம் முதல்வராக இல்லாமல் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள் எங்கெல்லாம் பரந்து வாழ்கின்றார்களோ அவர்களுக்கு பிரச்சினை என்று வருகின்ற பொழுது குரல் கொடுக்கவும் செயற்படவும் தயாராக இருக்க வேண்டும்.



குறிப்பாக இன்று இலங்கையில் வாழுகின்ற தொப்புள் கொடி உறவுகளான மலையக மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்கள்.



இப்படி தஞ்சமடைந்தவர்கள் இன்று பல்வேறு சட்ட சிக்கல்கலை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களின் விடயத்தில் அதிக கவனம் எடுத்து இந்திய மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.நீங்கள் பல சவால்களுக்கு மத்தியிலேயே முதல்வராக கடமையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்கு துணிவாக முகம் கொடுக்க கூடிய துணிவு உங்களிடம் இருக்கின்றது.



இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக தாங்கள் நன்கு அறிந்தவர் என்ற வகையில் எங்களுடைய இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே, இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் ஒரு சுமுகமான உறவை பேனி அதற்கான தீர்வை பெற்றுக் கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன் எனவஞம் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • 514
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads