சினிமா செய்திகள்
நடிகை சுஜாதா
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
Ads
 ·   ·  7528 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கோகோ காப் டீன்ஏஜ் வயதில் கிராண்ட்லாம் பட்டம் வென்று சாதனை

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான அரினா சபலென்கா (பெலாரஸ்), 6-ம் நிலை இளம் புயல் கோகோ காப்புடன் (அமெரிக்கா) மோதினார். 

முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா எதிராளியின் 3 சர்வீஸ்களை முறியடித்ததுடன் அந்த செட்டையும் வசப்படுத்தினார். உள்ளூர் ரசிகர்களின் உற்சாக குரல், அமோக ஆதரவுடன் ஆக்ரோஷமாக மட்டையை சுழற்றிய கோகோ காப் சரிவில் இருந்து எழுச்சி பெற்று அடுத்த செட்டில் பதிலடி கொடுத்தார். 

கடைசி செட்டிலும் கோகோ காப்பின் கை முழுமையாக ஓங்கியது. ஒரு கட்டத்தில் பதற்றத்திற்குள்ளான சபலென்கா பந்தை வலுவாக வெளியே அடித்து புள்ளிகளை தாரைவார்க்கும் தவறுகளை அதிகமாக (46 முறை) செய்தார். இவை எல்லாம் கோகோ காப்புக்கு சாதகமாக மாறியது. 

கோகோ காப் 'சாம்பியன்' 2 மணி 6 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் கோகோ காப் 2-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சபலென்காவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் தொடர்ச்சியாக ருசித்த 12-வது வெற்றி இதுவாகும். அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். 

21-ம் நூற்றாண்டில் 'டீன்ஏஜ்' வயதில் கிராண்ட்லாம் பட்டத்தை வென்ற முதல் அமெரிக்க வீராங்கனை என்ற சிறப்பையும் 19 வயதான கோகோ காப் பெற்றார். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு அமெரிக்க ஓபனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது 17-வது வயதில் வென்று இருந்ததே சாதனையாக இருந்தது. 

வாகை சூடியதும் உணர்ச்சி மிகுதியால் ஆனந்த கண்ணீர் விட்ட கோகோ காப் கூறுகையில், கோப்பையை வென்றது எனக்கே கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. 2022-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதி ஆட்டத்தில் தோற்ற போது இதயமே நொறுங்கிப்போனது. ஆனால் சோதனைகளையும், சவால்களையும் கடந்து நான் நினைத்ததை விட இனிமையான ஒரு தருணத்தை கடவுள் தந்துள்ளதாக உணர்கிறேன். 

ஆட்டம் முடிந்ததும் எனது பெற்றோரை கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். அப்போது எனது தந்தையின் அழுகுரல் கேட்டது. அவர் அழுததை இதற்கு முன்பு பார்த்ததில்லை. இந்த தருணத்தை ஒரு போதும் மறக்கமாட்டேன். எல்லா காலத்திலும் உலகின் சிறந்த வீராங்கனையாக இருக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றார். 

இந்த வெற்றியின் மூலம் கோகோ காப் ரூ.24¾ கோடியை பரிசாக அள்ளினார். அத்துடன் இன்று வெளியாகும் புதிய தரவரிசைப்பட்டியலில் 6-ல் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறுகிறார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். மேலும் இரட்டையர் தரவரிசையில் சக நாட்டவர் ஜெசிகா பெகுலாவுடன் இணைந்து முதலிடத்தை பிடிக்கிறார். 

ரூ.12½ கோடி பரிசாக பெற்ற சபலென்கா ஒற்றையர் தரவரிசையில் மேலும் ஒரு இடம் உயர்ந்து முதல்முறையாக 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறுகிறார். 25 வயதான சபலென்கா கூறுகையில், உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது மிகப்பெரிய முன்னேற்றம். சிறந்த சாதனை. ஆண்டின் இறுதி வரை 'நம்பர் ஒன்' இடத்தை தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அதுவே இன்னும் நன்றாக செயல்பட உத்வேகம் அளிக்கும் என்று குறிப்பிட்டார்.

 

  • 98
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads