சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  8178 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மணிப்பூர் நிவாரண முகாமில் கணவன் மனைவியை பிரித்த சோக சம்பவம்

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. 

இந்த வன்முறையை தொடர்ந்து, வீடுகள், பள்ளி, கல்லூரிகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் அடித்து, நொறுக்கப்பட்டன. தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. கலவரத்தில், பெண்கள் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்தனர். பலர் கடத்தி செல்லப்பட்டு, கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தன. 

நிர்வாண கோலத்தில் ஊர்வலம் அழைத்து சென்று அவர்களுக்கு அவமதிப்பும் நடந்தது. இதுபற்றிய வீடியோ காட்சிகள் வெளிவந்து, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரவ செய்தது. மெய்தி சமூகத்தினரை, பாதுகாப்புக்காக மீட்டு, அழைத்து சென்று இம்பாலில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர். இதில், ஒரு ஜோடி கலப்பு திருமணம் செய்துள்ளது. அவர்களில் கணவர் மெய்தி சமூக நபர். அவரது மனைவி குகி சமூக பெண். இதனை அறிந்த முகாமில் இருந்தவர்கள், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர். 

கோகிரிசாங் என்ற அந்த இளம்பெண் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஒரு மாதம் வரை கணவருடன் எந்த தொடர்பும் இல்லை. அவரிடம் பேசவும் இல்லை. அவரை தொடர்பு கொண்டபோது, போன் சுவிட்ச்-ஆப் என வந்தது. அவருடைய நிலைமை என்னவென தெரியவில்லை. 

மெய்தி சமூக நபரை திருமணம் செய்த பின்னர், என்னையும் மெய்தி நபராகவே அடையாளம் காண்பார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால், என்னுடைய ஆதார் அட்டையை பார்த்த முகாமில் இருந்தவர்கள், அதில் உள்ள பெயரின்படி, நான் குகி சமூக பெண் என்றும், மெய்தி பெண் இல்லை என்றும் கூறி கட்டாயப்படுத்தி வெளியேற்றி விட்டனர்.

எனது குழந்தை, அதன் தந்தையையும் மற்றும் தாத்தா-பாட்டியையும் பார்ப்பதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும், உறுதி செய்ய வேண்டும். எனது கணவருக்கும், உறவினர்களுக்கும் நான் உயிருடனே இருக்கிறேன் என தெரிவித்து கொள்கிறேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார். மணிப்பூரில் வன்முறை பரவி 2 மாதங்கள் ஆன நிலையில், இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை.

 

  • 455
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads