சினிமா செய்திகள்
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார். அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் வி
நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்தத
மனைவியை விவகாரத்து செய்கிறார் நடிகர் ஜெயம் ரவி
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்ட
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்க
Ads
 ·   ·  7908 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மணிப்பூர் நிவாரண முகாமில் கணவன் மனைவியை பிரித்த சோக சம்பவம்

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. 

இந்த வன்முறையை தொடர்ந்து, வீடுகள், பள்ளி, கல்லூரிகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் அடித்து, நொறுக்கப்பட்டன. தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. கலவரத்தில், பெண்கள் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்தனர். பலர் கடத்தி செல்லப்பட்டு, கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தன. 

நிர்வாண கோலத்தில் ஊர்வலம் அழைத்து சென்று அவர்களுக்கு அவமதிப்பும் நடந்தது. இதுபற்றிய வீடியோ காட்சிகள் வெளிவந்து, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரவ செய்தது. மெய்தி சமூகத்தினரை, பாதுகாப்புக்காக மீட்டு, அழைத்து சென்று இம்பாலில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர். இதில், ஒரு ஜோடி கலப்பு திருமணம் செய்துள்ளது. அவர்களில் கணவர் மெய்தி சமூக நபர். அவரது மனைவி குகி சமூக பெண். இதனை அறிந்த முகாமில் இருந்தவர்கள், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர். 

கோகிரிசாங் என்ற அந்த இளம்பெண் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஒரு மாதம் வரை கணவருடன் எந்த தொடர்பும் இல்லை. அவரிடம் பேசவும் இல்லை. அவரை தொடர்பு கொண்டபோது, போன் சுவிட்ச்-ஆப் என வந்தது. அவருடைய நிலைமை என்னவென தெரியவில்லை. 

மெய்தி சமூக நபரை திருமணம் செய்த பின்னர், என்னையும் மெய்தி நபராகவே அடையாளம் காண்பார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால், என்னுடைய ஆதார் அட்டையை பார்த்த முகாமில் இருந்தவர்கள், அதில் உள்ள பெயரின்படி, நான் குகி சமூக பெண் என்றும், மெய்தி பெண் இல்லை என்றும் கூறி கட்டாயப்படுத்தி வெளியேற்றி விட்டனர்.

எனது குழந்தை, அதன் தந்தையையும் மற்றும் தாத்தா-பாட்டியையும் பார்ப்பதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும், உறுதி செய்ய வேண்டும். எனது கணவருக்கும், உறவினர்களுக்கும் நான் உயிருடனே இருக்கிறேன் என தெரிவித்து கொள்கிறேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார். மணிப்பூரில் வன்முறை பரவி 2 மாதங்கள் ஆன நிலையில், இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை.

 

  • 353
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads