சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  8178 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஒரே பெண்ணை காதலித்த சகோதரர்கள்

மத்திய பிரதேசத்தில் பாலாகாட் மாவட்டத்தில் லிங்மரா கிராமத்தில் ராம்பயாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தினி என்ற கிராமத்தில், வசித்து வருபவர் சிவசங்கர் (வயது 22). சிவசங்கரின் இளைய சகோதரர் மசூம். 

கடந்த சில நாட்களுக்கு முன் புதர் ஒன்றில் இருந்து போலீசார் உடல் ஒன்றை கைப்பற்றி விசாரணை செய்ததில், அது மசூமின் உடல் என தெரிய வந்தது. தொடர்ந்து சிவசங்கரை பிடித்து போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.  

சகோதரர்கள் இருவரும் வேலைக்காக மராட்டியத்தின் நாக்பூர் நகருக்கு சென்று உள்ளனர். வேலைக்கு சென்ற இடத்தில், மசூமுக்கு இளம்பெண் ஒருவர் மீது காதல் ஏற்பட்டு உள்ளது. அந்த இளம்பெண்ணும் அதே இடத்தில் பணிபுரிந்ததுடன் மசூம் மீது காதல் கொண்டு உள்ளார்.  ஆனால், அந்த இளம்பெண் மீது சிவசங்கரும் காதல் வசப்பட்டு உள்ளார். இது சகோதரர்களுக்கு இடையே மோதலாக மாறி உள்ளது. ஆனால், மசூமும் அந்த இளம்பெண்ணும் அடிக்கடி சந்தித்து பேசி வந்து உள்ளனர். 

இது சிவசங்கருக்கு பிடிக்கவில்லை. இவர்களது சந்திப்பால் சிவசங்கர் ஆத்திரம் அடைந்து உள்ளார். அண்ணன் அந்த இளம்பெண் மீது காதல் கொண்டபோதும், அந்த இளம்பெண்ணோ அவரது இளைய சகோதரரை விரும்பியுள்ளார். 

அண்ணனின் காதல் ஒரு தலை காதலாக இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி சகோதரர்கள் இருவரும் நாக்பூரில் இருந்து சொந்த கிராமத்திற்கு திரும்பி உள்ளனர். அவர்கள் நள்ளிரவு 1 மணியளவில் வராசியோனி பகுதிக்கு வந்தபோது, சகோதரர் மசூமுக்கு சிவசங்கர் நிறைய மது ஊற்றி கொடுத்து உள்ளார். 

இதன்பின்னர் இருவரும் மீண்டும் கிராமத்திற்கு புறப்பட்டனர். அவர்கள் நடந்து சென்றபோது, இளம்பெண் விவகாரம் பற்றி பேசியுள்ளனர். இதில், ஆத்திரத்தில் இருந்த சிவசங்கர் மறைத்து வைத்திருந்த சுத்தியல் ஒன்றால் மசூம் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார். 

சம்பவ இடத்திலேயே மசூம் உயிரிழந்து விட்டார். இதன்பின் மசூமின் உடலை புதர் ஒன்றில் மறைத்து வைத்து விட்டு, சிவசங்கர் தப்பி சென்று உள்ளார். திட்டமிட்டே சிவசங்கர் இதனை நடத்தியது தெரிய வந்தது. போலீசார் விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனர்.

 

  • 307
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads