சினிமா செய்திகள்
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
மதுரையில் நடந்து முடிந்தது ரோபோ சங்கர் மகளின் திருமணம்
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. குடும்பத்தினரால் நிச்சயிக்கப் பட்டு கோலாகலமாக நடந்து முடிந்த
வேறொரு பெண்ணுடன் 4 வருஷமாக தொடர்பில் இருக்கும் கணவன் குறித்து வருந்திய நடிகை
துக்ளக் தர்பார், வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள சமயுக்தா பிக் பாஸ் மூலம் பிரபலமானார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கணவர் கார்த்திக் துபாயில் வேல
தன் குழந்தை முன்னிலையில் காதலனுடன் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றிக்கொண்ட நடிகை
நடிகை எமி ஜாக்சனுக்கு லண்டனில், கடந்த சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வரு
Ads
 ·   ·  662 news
  •  ·  15 friends
  • S

    23 followers

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும்

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும். அந்த நினைவுத் தூபி இன்றைய தினத்திற்கும், நாளைய தினத்திற்கும் பொருந்தாது என்பதினால் அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்குவதற்கு யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் எடுத்த முடிவு, காலத்திற்கு தேவையான முடிவாகும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க பாராட்டு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இருட்டோடு இருட்டாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில், நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் வருட காலப்பகுதியில் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகத்தின் குழுவினால் ஏதோ ஒரு நினைவுத்தூபியொன்று அதற்குள் கட்டியெழுப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு அந்த நினைவுத்தூபியை அடிக்கடி மேம்படுத்தப்பட்டதான விடயத்தையும் அறியக்கூடியதாகவுள்ளது. இருப்பினும் உண்மையில் தெரிவிப்பதாயின், அது வடக்கு தெற்குக் கிடையிலான ஐக்கியத்திற்கு தடையாக அமையக் கூடும்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா இன்று இலங்கையிலுள்ள அருமையான திறமைமிக்க தலை சிறந்த உபவேந்தர். அத்தோடு மிகவும் திறமையான நிர்வாகி. சமீபகாலப்பகுதியில் நான் கண்ட திறமைமிக்க உபவேந்தர். அவர் தீர்மானமொன்றுக்கு வந்துள்ளார். அந்த நினைவுத் தூபி இன்றைய தினத்திற்கும், நாளைய தினத்திற்கும் பொருந்தாது என்பதினால் அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்குவதற்கான முடிவாகும் அது.

தற்பொழுது பல்கலைக்கழக கட்டமைப்பில் கற்கும் மாணவர்கள், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் 9, 10 மற்றும் 11 வயதைக் கொண்டிருந்த எமது மாணவர்கள் ஆவர். தமிழ் , சிங்களம் அல்லது முஸ்லிம் எந்தவொரு இனத்திற்கு அல்லது மதத்திற்கு உட்பட்டவராக இருந்த போதிலும் இலங்கையர்களாகிய எமது பிள்ளைகள் இவர்கள்.

இதன் காரணமாக இன்று கூறுவதற்கு மகிழ்ச்சியடைகின்றோம் என்பது என்னவெனில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் சுமார் 1500 பேர் கல்வி கற்கின்றனர். அத்துடன் தெற்கிலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆகக் குறைந்த ரீதியில் 600 இற்கும் 700 இற்கும் இடைப்பட்ட தமிழ் மாணவர்கள் விசேடமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து வரும் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில் எமக்குள்ள முக்கியத்துவமான விடயம் தான் எமது மாணவர்கள் மத்தியில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதாகும்.

இதன் காரணமாக எமக்கு முன்பிருந்த அந்த அனுபவங்களை எதிர்காலத்திலும் காண்பதற்கு ஏற்படாது என்பற்கு எமக்கு உள்ள ஒரே ஒரு காரணி தான் இந்த மாணவர்கள் மத்தியிலுள்ள ஐக்கியம் , சமாதானம் ஆகும். இவர்கள் இருப்பது பொதுவான சாதாரண விடுதிகளில் ஆகும். இவர்கள் கலந்துகொள்வது பொதுவான விரிவுரைகளிலாகும். இவர்களது விளையாட்டு நடவடிக்கைகள் போன்ற அனைத்தும் இடம்பெறுவது பொதுவானதாகவே இடம்பெறுகிறது.

இதுவரையில் எந்தவொரு பிரச்சினையும் இந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெறாதிருப்பதற்கு மாணவர்களே பொறுப்பாக இருப்பது தொடர்பில் நாம் நாடு, இனம் என்ற ரீதியில் உண்மையிலேயே அதிஷ்டமான விடயமாகும்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் அவர்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு இந்த நினைவுத் தூபியை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இரவில் இருந்து அகற்றப்படுகிறது. நான் நினைக்கும் வகையில் இது மிகவும் காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும். எமக்கு தேவைப்படுவது என்னவெனில் யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச்சின்னங்களேயாகும். இதற்காக தேவையான நடவடிக்கைகளை நாம் எமது மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

  • 711
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads