Category:
Created:
Updated:
அயர்லாந்து நாட்டை சேர்ந்த டெர்மோட் மில்ஸ் என்பவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் இவருக்கு வருடத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.1.3 கோடி சம்பளமும் கிடைத்துள்ளது. ஆனால் அவருக்கு யாருமே எந்த வேலையும் தரவில்லையாம். வாரம் 5 நாட்கள் அலுவலகம் சென்றால் 2 நாட்கள்தான் வேலை இருப்பதாகவும், மீதம் 3 நாட்கள் செய்திதாள் வாசித்துக் கொண்டு பொழுதை கழித்துள்ளார்.
ஒரு சமயத்திற்கும் மேல் பொறுக்க முடியாமல் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு தினம்தோறும் வேலை அளிக்க வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்துள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.