சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  171 news
  • 1 members
  • 1 friends

வேரவில் கிராஞ்சி வலைப்பாடு ஆகிய கிராமங்களுக்கான பிரதான வீதி பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் போக்குவரத்துக்கள் யாவும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளாக பிரதேச தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர்பிரிவிற்குட்பட்ட வேரவில் கிராஞ்சி வலைப்பாடு ஆகிய கிராமங்களுக்கான பிரதான வீதி இதுவரை சொப்பனிடப்படாததால் மக்கள் போக்குவரத்தில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன் தற்போது பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் போக்குவரத்துக்கள் யாவும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளாக  பிரதேச தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வலைப்பாடு வேரவில் பொன்னாவெளி கிராஞ்சி சிவபுரம் ஆகிய கிராமங்களுக்கான ஒரே ஒரு பாதையாக காணப்படுகின்ற பல்லவராயன் கட்டு வேரவில் வீதி சுமார் 45 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் ஐ றோட்த் திட்டத்தின் கீழ் குறித்த வீதி புனரமைப்புக்காக தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அதன் புனரமைப்பு பணிகள் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளன இவ்வாறு கைவிடப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இவ்விதியின் மூன்று இடங்களில் வெள்ள நீர் குறுக்கறுத்து பாய்ந்ததுடன் நீண்ட நாட்களுக்கு வெள்ளமும் தேங்கி காணப்பட்டதுடன் இந்தப் பகுதிக்கான போக்கு வரத்துக்கள் உழவு இயந்திரங்களிலேயே மேற்கொள்ளப்பட்டன.குறித்த வீதி நிரந்தரமாக புனரமைக்கப்படாத நிலையில் இங்குள்ள மக்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் குறிப்பாக இந்த வீதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமையினால் வேரவில் வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் சென்று வருவதற்கும் அங்கிருந்து அவசர நோயாளிகளை முழங்காவில் வைத்தியசாலைகோ அல்லது கிளிநொச்சி வைத்தியசாலைக்கோ அல்லது பிற வைத்தியசாலைகளுக்கோ கொண்டு செல்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதேவேளை இந்த வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாமையினால் குறித்த பிரதேசத்திலிருந்து சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நோயாளிகள் பலர் இடைநடுவில் உயிரிழந்ததாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர் இவ்வாறு 45வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாது இருக்கின்ற வீதி கடந்த ஆண்டில் புனரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதும் அந்த வீதி புனரமைக்கப்படவில்லை இதனால் தாங்கள் தொடர்ந்தும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

  • 295
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads