சினிமா செய்திகள்
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
Ads
 ·   ·  8226 news
  •  ·  5 friends
  • I

    9 followers

'ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்லுங்கள்' என கூறிய எம்.பி. 15 நாட்கள் சஸ்பெண்ட்

ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோர் ஆண்டு தோறும் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது வழக்கம். மத்திய தரைக்கடலில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும்போது படகு விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முற்பட்டனர். அப்போது, அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானது. அப்போது, தரைக்கடல் பகுதியில் இருந்த தன்னார்வு தொண்டு அமைப்பை சேர்ந்த 3 கப்பல்கள் அகதிகளை மீட்டு ஐரோப்பாவிற்கு அழைத்து வந்தன. ஆனால், அதிகாரிகள் அனுமதி மறுத்ததையடுத்து 1,000 அகதிகளுடன் வந்த 3 கப்பல்களும் இத்தாலி கடல் எல்லையில் மத்திய தரைக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஐரோப்பிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய தரைக்கடலில் கப்பலில் உள்ள அகதிகள் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமை விவாதம் நடைபெற்றது.

அப்போது, ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட கருப்பினத்தவரான இடதுசாரி எம்.பி. கார்லொஸ் மார்டின்ஸ் பிலாங்கோ, அகதிகளை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இந்த விவகாரத்தில் தீர்வுகான உதவ வேண்டும் என்றார். அப்போது, குறுக்கிட்ட வலதுசாரி கட்சி எம்.பி.யான கிரிகோயர் டி போர்னாஸ், அவர்கள் ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்ல வேண்டும்' என்று பிரஞ்ச் மொழியில் கூறினார். இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பிரஞ்ச் மொழியில் ' அவர்கள் ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்ல வேண்டும்' மற்றும் 'அவர் ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்ல வேண்டும்' என்றபதற்கு ஒரே வாக்கியம் தான் பயன்படுத்தப்படுகிறது.

அதனால், கருப்பின எம்.பி.யான கார்லொசை வெள்ளையின எம்.பி. கிரிகோயர் ஆப்பிரிக்காவுக்கு திருப்பி செல்ல வேண்டும் என்று சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் அகதிகளை தான் ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று கூறியதாக கிரிகோயர் விளக்கம் அளித்தார். இந்நிலையில், 'ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்லுங்கள்' பேச்சுக்கு கண்டனம் எழுந்த நிலையில் எம்.பி. கிரிகோயரை நாடாளுமன்றத்தில் இருந்து 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். கிரிகோயர் 15 நாட்கள் நாடாளுமன்ற நடவடிக்கையில் பங்கேற்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 335
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads