Category:
Created:
Updated:
கிளிநொச்சிஏ-09 வீதியின் பரந்தன் பகுதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (01-11-2022) தனிமையில் தங்குயிருந்த முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் மேற்படி விடுதியில் தங்கி இருந்து கடந்த வெள்ளிக்கிழமை வரையும் குடும்பத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். அதன் பின்னர் தொடர்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த விடுதியில் துர்நாற்றம் வீசுவது தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி போலீசார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 71 வயதுடைய சின்னையா நாகலிங்கம் என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்படி முதியவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் நீதி மன்ற கட்டளைக்கு அமைவாக உடற்கூற்று பரிசோதனை பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.