Category:
Created:
Updated:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 285 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,88,734 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 70 பேர், செங்கல்பட்டில் 25 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரு நாளில் மட்டும் 346 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,46,524 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 38,048 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளாகி தற்போது 4 ஆயிரத்து 162 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மருத்துவத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.