சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

முல்லையில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவதற்கான உழுந்து, பயறு பயிர்ச்செய்கை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிராமிய பொருளாதார பயிர்ச்செய்கை மற்றும் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் பின்தங்கிய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் உழுந்து மற்றும் பயறு பயிர்ச்செய்கை திட்மானது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இன்று(14) ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரமான காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 1,980.000ரூபா ஒதுக்கப்பட்டுள்ள இத் திட்டத்தில், உழுந்து பயிர்ச்செய்கை 97 ஏக்கர் நிலப்பரப்பில் 253 பயனாளிகளும், பயறு செய்கை 88.75 ஏக்கர் நிலப்பரப்பில் 183 பயனாளிகளும் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன்போது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் 20பயனாளிகளுக்கான உழுந்தும், 28 பயனாளிகளுக்கான பயறும் வழங்கி வைக்கப்பட்டது.தொடர்ந்து காலை 10.30 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 25 பயனாளிகளுக்கான உழுந்து மற்றும் 24 பயனாளிகளுக்கான பயறு வழங்கி வைக்கப்பட்டது.தொடர்ந்து காலை 11.30 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 20 பயனாளிகளுக்கான உழுந்து மற்றும் 24 பயனாளிகளுக்கான பயறு வழங்கி வைக்கப்பட்டது.தொடர்ந்து பி.ப 3.00 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது 88 பயனாளிகளுக்கான உழுந்து மற்றும் 56 பயனாளிகளுக்கான பயறு வழங்கி வைக்கப்பட்டது.இறுதியாக மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் பி.ப 4.00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் 100பயனாளிகளுக்கான உழுந்து மற்றும் 44 பயனாளிகளுக்கான பயறு வழங்கி வைக்கப்பட்டன.மேலும் வெலிஓயா பிரதேச செயலகத்தில் காலை பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 07 பயனாளிகளுக்கான பயறு வழங்கி வைக்கப்பட்டது.குறித்த பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன், மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்.

  • 304
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads