சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

நாட்டை இன்று ஆட்டிப்படைக்கும் வறுமை பொருட்களின் விலையேற்றம் தொழில் வாய்ப்பின்மை என்பன சாதாரண மக்களிடையேபலதரப்பட்ட நெருக்கடி நிலையை தோற்றுவித்துள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் எவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் கனிசமான குடும்பங்கள் தொடர்ந்தும் வறுமை நிலையினையே எதிர் நோக்கி வருகின்றன.கிளிநொச்சி மேற்கு பிரதேசமான அக்கராயன் குளம் கோணாவில் ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளில் அதிகளவான குடும்பங்கள் வறுமையிலேயே வாழ்ந்து வருகின்றன இவ்வாறானவர்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவுகள் முதியோர் கொடுப்பனவுகள் எனப்பல உதவிகள் கிடைத்தாலும் அவற்றை கொண்டு ஒரு வாரகாலமாவது சமாளிக்க கூடியதாகவே இருக்கின்றது.

என குறிப்பிடுகின்றனர் காரணம் இன்றுள்ள பண வீக்கமாகும் அக்கராயன் பகுதியில் உள்ள கெங்காதரன் குடியிருப்பு பிரதேசத்தில் வசித்து வரும் சின்னத்தங்கச்சி என்பவர் குறிப்பிடுகையில் எனது ஒரே ஒரு பிள்ளையும் யுத்தகாலபப்பகுதியில் காணாமல் போயுள்ளார்.

நானும் ஒரு நோயாளி உழைக்கப்பபறிக்க முடியாது வருமானம் எதும் இல்லை இப்போது சாமான்கள் எல்லாம் விலை சமுர்த்தி காசை வைத்து என்ன செய்யமுடியும் சில வேளை ஒரு நேரம் பாதி நேரம் சாப்பிடுவேன் அதுவும் இல்லாவிட்டால் தண்ணீரை குடித்து விட்டுப் படுப்பேன் எனக்கு நிறைய வருத்தம் உள்ளது கிளினிக் சென்று வருகின்றேன் அவர்கள் சத்தான சாப்படு சாப்பிடச் சொல்லுகின்றார்கள் எதை வைத்து சாப்படுவது நங்கள் பட்டினியில் இருக்கும் போது யாரிடமும் சென்று கேட்க முடியாது.  ஏனெனில் அவர்களும் எங்களைப் போல் தான் இருக்கின்றார்கள் அயலவர்கள் வசதியாக இருந்தால் அவர்களிடம் ஏதாவது கேட்கலாம் ஆனால் அவர்களும் எங்களைப் போன்றே இருக்கின்றனர் என்றார்இதே போன்று அதே பகுதியில் தீ விபத்து ஒன்றினால் காயப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒரு தாய் குறிப்பிடுகையில் எனது மகன் யுத்தத்தின் போது காணாமல் போய் உள்ளார் இதனால் நான் மனநிலை பாதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றேன்,  என்னை உழைத்து பார்க்கக்கூடிய யாரும் இல்லை மகளின் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன் அவர்களுக்கும் தொழில் இல்லை அவர்களுடைய வருமானத்தில் தான் நானும் வாழுகின்றேன்.  

இப்பொழுது தனி ஒருவர் உழைத்து வாழ முடியாத சூழலில் என்னையும் அவர்கள் வைத்து கவனிக்கின்றார்கள் கிளினிக் போய் வர வேண்டும் அதற்கு கூட போக முடியாது அது மட்டும் இல்லாது சத்தான உணவுகளை சாப்பிட சொல்லுகின்றார்கள் ஆனால் இன்று சோறும் சம்பலும் மாத்திரமே சாப்பிட்டேன் காலையில் சாப்பாடு இல்லை இரவுக்கும் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார் இவ்வாறு பலர் வருமானமின்றியும் அன்றாட உணவின்றியும் வாழ்கின்றனர்.

  • 293
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads