சினிமா செய்திகள்
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
Ads
 ·   ·  8226 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வீழ்ச்சி

இலங்கை வரலாற்றில் முதலாவது தடவையாகத் தான் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 6 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக அமைச்சர் நேற்று (07) பாராளுமன்றத்தில் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரத்திற்கு முன் இவ்வாறான நிலை எக்காரணத்திற்காகவும் ஏற்பட்டதில்லை. இதற்கு முதல் இரண்டு சந்தர்ப்பங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைவடைந்துள்ளது. 2002 இல் 1.4 வீதமும் 2021இல் கொரோனா தொற்றுக்காலத்தில் 3.6வீதமும் குறைந்து, இவற்றிற்கிணங்க இவ்வருடத்தில் முழுப் பொருளாதாரமும் வீழ்ந்துள்ளது. இது எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். பணவீக்கம் விலை உயர்வினால் சாதாரணமாக அதிகரித்துள்ளது. வாழ்வது ஒரு போராட்டமாக மாறியுள்ளது. வட்டி வீதம் என்று மில்லாதவாறு அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் நீண்டகாலமாக அரச நிதியில் ஏற்பட்டுள்ள மற்றும் எம்மால் தீர்க்க முடியாத நெருக்கடியினால் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணங்க நிதிப் பயன்பாட்டை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் அனைவரும் தவறு செய்து, அரச நிதியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளோம்.

அதன் பிரதிபலனாக 2000ஆம் ஆண்டு நாட்டின் வரிப் பட்டியல், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ரூபா 90பில்லியன், அரசின் மொத்த வருமானம் ரூபா 211பில்லியன், சம்பளம் வழங்கியதன் பின்னர் இலாபத்தில் ஏனைய சகல விடயங்களுக்காக ரூபா 121பில்லியன் கிடைத்தது.

2010ஆம் ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ரூபா 471பில்லியன், அரசின் மொத்த வருமானம் ரூபா 817பில்லியன், சம்பளம் வழங்கியதன் பின்னர் ஏனைய சகல விடயங்களுக்காக ரூபா 333பில்லியன் இலாபத்தில் மீதமானது.

2020ஆம் ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ரூபா 1050பில்லியன், அரசின் மொத்த வருமானம் ரூபா 1367பில்லியன், சம்பளம் வழங்கியதன் பின்னர் ஏனைய சகல விடயங்களுக்காக ரூபா 317 மில்லியன் இலாபத்தில் மீதமானது.

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புடன் 20 விடயங்கள் தொடர்பாக முன்வைத்தார். தானும் பிரதமரும் அவற்றை நிதானமாக செவிமடுத்தோம். ஆனால் அதற்கு பதில் வழங்குவதற்கு நேரம் போதாமையால் அதனை எழுத்து மூலமாக தெளிவுகளை சிறிய புத்தகமாக வழங்குவதை கௌரவமாக எடுத்துக்கொள்கின்றோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

  • 320
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads