சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றாவது காலாண்டுக்கான மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல்

பாடசாலை மட்டங்களில் போசாக்கு அச்சுறுத்தல்களுக்கு உள்ளான குழந்தைகள் தொடர்பில் அடையாளம் காணப்படுமிடத்து அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி  கேதீஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றாவது காலாண்டுக்கான மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இன்று (27-09-2022) பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் தொடர்ந்து உரையாற்றுககையில் ஜனாதிபதியின் விசேட செயற் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய வேலை திட்டங்களில் ஒன்றான உணவு பாதுகாப்பு தொடர்பான செயலணி உருவாக்கப்பட்டு அதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

குறிப்பாக கிராமமட்டங்களிலும் இந்த குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன குறிப்பாக உணவு பஞ்சம் ஏற்படாத வாறும் போசாக்கு நிலைமையை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலும் இவ்வாறு செய்யத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது மாவட்டத்தில் பாடசாலைகள் மட்டத்திலேபோஷாக்கு அச்சுறுத்தலான குழந்தைகள் தொடர்பில் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கான விசேட வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்த அவர் அதிகர்த்து செல்லும் போதைப்பொருள் பயன்பாடுகளை தடுப்பதற்கு அனைவரது ஒத்துழைப்புக்களும் அவசியமாகும் போதைப் பொருள் பாவனைகளில் இருந்து இளம் சமூகத்தை பாதுகாப்பதற்கு சட்டத்தால் மட்டும் முடியாது அனைவரது ஒத்துழைப்புகளும் அவசியமாகும் குறிப்பாக பெற்றோர்கள் பாடசாலை சமூகம் ஆகியோரினுடைய முழுமையான ஒரு கூட்டுப் பொறுப்புடன் இவற்றை கட்டுப்படுத்த முடியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)  திருலிங்கநாதன் கிளிநொச்சி கல்விப் பணிப்பாளர்  கமலராஜன்  வடக்கு கல்விப் பணிப்பாளர் சிவனருள் ராஜா    பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் எஸ் கிருஷ்ணேந்திரன்  கரைச்சி பிரதேச செயலாளர்  ஜெயகரன் கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ. பிருந்தாகரன் மற்றும பொலிஸ்உத்தியேயாகத்தர்கள்  மாவட்ட தாய் சேய் நல வைத்திய அதிகாரி பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் அரச சார்பற்ற நிறுவனங்களில் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 383
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads