சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கல்மடுக் குளத்தின் நீரை சட்டவிரோதமாக பயன்படுத்தி பயிர்செய்கை உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க பயிர்செய்கை குழுக் கூட்டத்தில் தீர்மானம்கொண்டு வரப்பட்டுள்ளது

கிளிநொச்சி  புளியம் பொக்கணை பகுதியில் கல்மடுக் குளத்தின் நீரை  சட்டவிரோதமாக  பயன்படுத்தி பயிர்செய்கை மேற்கொண்டுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மாவட்ட பயிர்செய்கை குழுக் கூட்டத்தில் தீர்மானம்கொண்டு வரப்பட்டுள்ளது.

கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் மாவட்ட பயிர் செய்கை குழுவின் தீரமானங்களுக்கு மாறாக கல்மடுக்குளத்து நீரை பயன்படுத்தி தற்போது சுமார் 50 ஏக்கருக்கு மேற்பட்டநிலப்பரப்பில் பிரதேசத்திலுள்ள ஆசிரியர் மற்றும் கமக்கார அமைப்பின் தலைவர் மற்றும் பணவசதி படைத்தவர்களால் இவ்வாறு நெற்செய்கை சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நீர்ப்பாசன திணைக்களத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள கல்மடுக் குளத்திலிருந்தும் இதற்காக மூன்று தடவைகள் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு மூன்று தடவைகளும் குளத்திலிருந்து திறக்கப்ட்ட அதிகளவான நீர் வீண்விரயமாகியதுடன் சுமார் 150 ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலங்கள் கால போக செய்கைக்கு பயன்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்மடுக்குளத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீற்றர் துாரத்திற்கு அப்பாலுள்ள குறித்த பிரதேசத்தில் எந்த ஒரு திணைக்களங்களினதும் அனுமதிகளுமின்றி மாவட்ட பயிர்செய்கை திட்டமிடல்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலகத்தில் அன்மையில் நடைபெற்ற விவசாய குழு கூட்டத்தில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்தையடுத்து சட்ட விரோத செய்கைகளுக்கு எதிராக தர்மபுரம் போலீஸ் நிலையத்தில் பிரதேச செயலகத்தினால் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கல்மடுக்குளத்திலிருந்து எவ்வாறு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு நீர் பாசனத்திணைக்கள அதிகாரிகள் மௌனம் காத்தனர் ஆகவே குறித்த விடயம் ஒரு சில திணைக்கள அதிகாரிகளின் முழுமையான சம்மதத்துடனே முன்னெடுக்கப்ட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

எனவே குறித்த பயிர் செய்கை தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

  • 382
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads