சினிமா செய்திகள்
பரிசு கொடுத்த எம்.ஜி.ஆரையே யார்னு கேட்ட நாகேஷ்
நடந்தது என்ன?லீவு தராத மேனேஜரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்து அடுத்த நாள் டவுசர் பணியனுடன் ஆபீஸ் வந்து அமர்ந்துள்ளார்.தமிழ் சினிமாவில் கலைவாணர்
நடிகை பானுப்ரியா எப்படி இருக்கிறார்?
கணவர் இறந்தபின் எல்லாமே மறந்திருச்சு... மனமும் வெறுமையாகிவிட்டது என்று கலங்கிய பானுப்ரியா தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.திர
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கல்மடுக் குளத்தின் நீரை சட்டவிரோதமாக பயன்படுத்தி பயிர்செய்கை உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க பயிர்செய்கை குழுக் கூட்டத்தில் தீர்மானம்கொண்டு வரப்பட்டுள்ளது

கிளிநொச்சி  புளியம் பொக்கணை பகுதியில் கல்மடுக் குளத்தின் நீரை  சட்டவிரோதமாக  பயன்படுத்தி பயிர்செய்கை மேற்கொண்டுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மாவட்ட பயிர்செய்கை குழுக் கூட்டத்தில் தீர்மானம்கொண்டு வரப்பட்டுள்ளது.

கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் மாவட்ட பயிர் செய்கை குழுவின் தீரமானங்களுக்கு மாறாக கல்மடுக்குளத்து நீரை பயன்படுத்தி தற்போது சுமார் 50 ஏக்கருக்கு மேற்பட்டநிலப்பரப்பில் பிரதேசத்திலுள்ள ஆசிரியர் மற்றும் கமக்கார அமைப்பின் தலைவர் மற்றும் பணவசதி படைத்தவர்களால் இவ்வாறு நெற்செய்கை சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நீர்ப்பாசன திணைக்களத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள கல்மடுக் குளத்திலிருந்தும் இதற்காக மூன்று தடவைகள் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு மூன்று தடவைகளும் குளத்திலிருந்து திறக்கப்ட்ட அதிகளவான நீர் வீண்விரயமாகியதுடன் சுமார் 150 ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலங்கள் கால போக செய்கைக்கு பயன்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்மடுக்குளத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீற்றர் துாரத்திற்கு அப்பாலுள்ள குறித்த பிரதேசத்தில் எந்த ஒரு திணைக்களங்களினதும் அனுமதிகளுமின்றி மாவட்ட பயிர்செய்கை திட்டமிடல்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலகத்தில் அன்மையில் நடைபெற்ற விவசாய குழு கூட்டத்தில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்தையடுத்து சட்ட விரோத செய்கைகளுக்கு எதிராக தர்மபுரம் போலீஸ் நிலையத்தில் பிரதேச செயலகத்தினால் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கல்மடுக்குளத்திலிருந்து எவ்வாறு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு நீர் பாசனத்திணைக்கள அதிகாரிகள் மௌனம் காத்தனர் ஆகவே குறித்த விடயம் ஒரு சில திணைக்கள அதிகாரிகளின் முழுமையான சம்மதத்துடனே முன்னெடுக்கப்ட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

எனவே குறித்த பயிர் செய்கை தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

  • 241
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads