சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியை சூழவுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் எல்லையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியை அண்டிய தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 498 ஏக்கருக்கும் அதிகளவான விவசாய நிலப்பகுதிகள் தொல்லியல் அடையாளப் பகுதிகளாக அடையாளமிடப்படுவது அந்த மக்களின் முற்றுமுழுதான வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

                         இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியில் தற்போது நீதிமன்ற கட்டளைகளையும் மீறி விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கடந்த வாரம் குறித்த பிரதேசத்தில் உள்ள பொது மக்களுக்கு சொந்தமான விவசாயக் காணிகள் தொல்லியல் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ளன.

குருந்தூர் மலைப்பகுதியில் காணப்படும் 58 காணி குளம் உள்ளிட்ட 78 ஏக்கர் வரையான காணிகளும் தொல்லியல் திணைக்களத்தினால் ஆய்வுக்குரிய பகுதிகளாகவும் அதேபோல தண்ணி முறிப்பு பிரதான வீதியின் பழைய தண்ணி முறிப்பு குடியிருப்பு பகுதி நாகசோலை ஒதுக்க காட்டுப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய 320 ஏக்கர் விவசாயக் காணிகளும் மேலதிகமாக சுவிகரிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1984 ஆம் ஆண்டு ஒதிய மலையில் நடைபெற்ற படுகொலை காரணமாக பழைய தண்ணி முறிப்பு பகுதியில் இருந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுடன் அவர்களுக்கு சொந்தமான குடியிருப்பு நிலங்கள் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் என்பவற்றை கைவிடப்பட்டு அந்த மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர்.  ஆனால், இப்பொழுதும் அந்த மக்கள் தங்கள் கைகளிலே காணி ஆவணங்களை வைத்திருக்கின்றார்கள்.  இது தவிர தண்ணி முறிப்பு அ.த.க பாடசாலை தபாலகம் அரச நெற்களஞ்சிய சாலை பழைய நீர்பாசன கட்டுமனங்கள் உள்ளிட்டவைகள் இப்பொழுதும் சிதைவடைந்த கட்டிடப் பகுதிகளாக இன்றும் காணப்படுகின்றன.

இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினாலும் வனவளத்திணைக்களத்தினாலும் அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.                                        அதன் தொடர்ச்சியாகவே     குருந்தூர் மலைப்பகுதியை சூழவுள்ள  பகுதிகளில் உள்ள  பொது  மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் எல்லையிடப்பட்டுள்ளன இது அந்த  மக்களினுடைய வாழ்வாதாரத்தை பறிக்கும் ஒரு செயலாகவே அமைந்திருக்கின்றது என்றும் துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

  • 359
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads