சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

தொழில் இல்லாத நிலையில் உணவிற்கே கஸ்ரம் மின்சாரம், குடிநீர், வீட்டு வசதியின்மை அதோடு கரடி, காட்டு யானைகளின் தொல்லையில் வாழ்ந்து வருவதாக இராமநாதபுரம் மாவடியம்மன் குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்

கிளிநொச்சி  இராமநாதபுரம் பிரதேசத்திற்குட்பட்ட மாவடியம்மன் புதிய குடியிருப்பில் வாழ்ந்து வரும் 38 வரையான  குடும்பங்கள் தொழில் வாய்க்கள் எதுவும் இல்லாத நிலையில் அன்றாட உணவிற்கே கஸ்ரப்படும் அதே நேரம்  குடிநீர் வசதியின்மை நிரந்தர வீட்டு வசதியின்மை மின்சார வசதியின்மை  காட்டு யானைகளின் தொல்லை கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியில்  வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடியம்மன் புதுக்காடு புதிய குடியிருப்பில் 38 வகையான குடும்பங்கள் தற்போது குடியேறி வாழ்ந்து வருகின்றன.

இவ்வாறு வாழ்ந்து வரும் குடும்பங்கள் தொழில் வாய்ப்பு இன்றிய நிலையில் அன்றாட உணவுக்கே பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்   அதாவது குறித்த பிரதேசத்தில் இருந்து கூலி வேலைக்கு செல்வதாக இருந்தாலும் மிக நீண்ட தூரத்துக்கு செல்ல வேண்டும் அவ்வாறு சென்றாலும் கூலி வேலைகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளதுடன் பெண் தலைமைத்துவ குடும்பங்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டி உள்ளனர்.

அதுமட்டுமல்லாது இந்த பிரதேசத்தில் உள்ள மக்களினுடைய குடிநீர் தேவைகளுக்காக மூன்று குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கின்ற போதும் அதில் இரண்டு கிணறுகள் பழுதடைநிலையில் காணப்படுகின்றன குறித்த ஒரே ஒரு கிணற்றில் இருந்து 38 குடும்பங்களும் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தமக்கான குடிநீர் பெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளன.

 இதனை விட தொன்னுாறு வீதமான  குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடடுவசதிகளோ  மின்சார வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை இதனால் மின்சார வசதியின்றியும்  தற்போது மண்ணெண்ணையின்றியும் இரவு வேளைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதை வேலை குறித்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் என்பவற்றுக்கு மத்தியில் ஒவ்வொரு இரவுகளையும் கழிக்க வேண்டி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

  • 583
  • More
Attachments
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads