
சுதந்திரபுரம் பகுதியிலும் முகமாலை மற்றும் ஆனையிறவிலும் 2108178 சதுரமீற்றர் பரப்பளவில் அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனம் தெரிவிப்பு
முல்லைத்தீவு அம்பகாமம் தச்சடம்பன் சுதந்திரபுரம் பகுதியிலும்; கிளிநொச்சி மாவட்டத்தில் முகமாலை மற்றும் ஆனையிறவிலும் இருபத்தொரு இலட்சத்து எட்டாயிரத்து நூற்றுஎழுபத்தெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (2இ108இ178ளஙஅ) இருந்து முப்பத்திமூவாயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து (33இ775) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். இது வரையான காலப்பகுதியில் முன்டுக்கப்பட்ட வேலத்திட்டங்கள் தொடர்பில் இன்று அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (ளுர்யுசுP)மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2022 ஜுன் மாதம்; 22 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும்; கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் இருபத்தொரு இலட்சத்து எட்டாயிரத்து நூற்றுஎழுபத்தெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (2இ108இ178ளஙஅ) இருந்து முப்பத்திமூவாயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து (33இ775) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும் அம்பகாமம்; பகுதியிலும்; துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.