Ads
கிளிநொச்சி இலக்கம் 72 A கனகாம்பியைக்குளம் பகுதியை சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் வயது 19 என்ற இளைஞன் காணாமல் போய்யுள்ளார்
மேற்படி இளைஞன் 16-06-2022 வியாழக்கிழமை அன்று அதிகாலை 7 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில் பயிச்சி நிலையம் ஒன்றுக்கு சென்று இருந்த நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாயாரான உதயராஜ் றோஜா தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் காணாமல் போன தனது மகன் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், தனது கணவர் உதயராஜ் 26-12-2005 அன்று யாழ் சாவகச்சேரி மீசாலையில் வைத்து அரச படைகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். இன்று வரை அவர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலையில் எனது ஒரே ஒரு மகன் அம்சவர்தன் காணாமல் போயுள்ளார்.எனவே எனது அன்பு மகன் அம்சவர்தனை கண்டுபிடித்து தருமாறு கோரியுள்ளார்.
Attachments
Info
Ads
Latest News
Ads