Category:
Created:
Updated:
முந்தைய நாள் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,முந்தைய நாள் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குள் நுழைந்த நபர் வீட்டிலிருந்த பெண்ணிடம் விலாசம் ஒன்றை காண்பித்து விசாரித்துள்ளார்.பின்னர் வீட்டிலிருந்து வெளியேறுவதுபோல் சென்றுவிட்டு பின்னர் திரும்பி ஓடிவந்து பெண் அணிந்திருந்த 2 பவுண் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியுள்ளார்.இதன்போது குறித்த பெண் சங்கிலியை அறுக்க விடாது தடுத்த நிலையில் பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.