Ads
இந்திய மக்களால் வழங்கப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான பொருட்கள் கொழும்பை வந்தடைந்தது
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இன்று முற்பகல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள உதவிப்பொருட்களில் 9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருந்து பொருட்கள் உள்ளடங்கியுள்ளன.
இலங்கையை வந்தடைந்துள்ள இந்த உதவிப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைமைத்துவத்திடம் கையளிக்கவுள்ளார்.
Info
Ads
Latest News
Ads