ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி

நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவருக்கு வந்தது. ஆனால், அதற்கு முன் அவர் மிகவும் ஆக்ரோஷமான மனிதராகவே இருந்தார். அதற்கு காரணம் இரவு, பகல் என ஓய்வில்லாமல் படங்களில் நடித்ததுதான். அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மனநிலையும் பாதிக்கப்பட்டது.

படப்பிடிப்பிற்கே குடித்துவிட்டு வாருவார். தூக்கம் வரக்கூடாது என்பதற்காக ஜர்தா பீடா போடுவார். ஆனால், அப்படி இருந்த ரஜினியை ஒரு பெண் மாற்றியது பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். தர்ம யுத்தம் படத்தின் படப்பிடிப்பு ஒரு கிறிஸ்துவ தொழிலதிபரின் வீட்டில் நடந்தது. அந்த வீட்டில் ரெஜினா வின்செண்ட் என்கிற வயதானவர் தங்கியிருந்தார்.

அவருக்கு அந்த வீட்டை படப்பிடிப்புக்கு கொடுக்க விருப்பமில்லை. ஆனாலும், அவரின் வீட்டில் இருந்த குழந்தைகளுக்கு ரஜினியை பிடிக்கும் என்பதால் மேலே தங்கிகொண்டு கீழ் போர்ஷனை கொடுத்தார். ஆனால், ரஜினி சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை. வந்தாலும் மதுபோதையில் இருந்தார். படப்பிடிப்பு சரியாக நடக்காமல் இருப்பதற்கு ரஜினிதான் காரணம் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

ஒருநாள் அவரை பார்த்த ரஜினிக்கும் குற்ற உணர்ச்சி வர ‘உங்களிடம் பேச வேண்டும்’ என சொல்ல, அந்த அம்மாவும் ‘நானும் உன்னிடம் பேச வேண்டும். தினமும் இப்படி குடித்துவிட்டு வரலமா?. இப்படி வந்தா படப்பிடிப்பு எப்படி நடக்கும்?’ எனக்கேட்க ‘இனிமேல் இப்படி செய்யமாட்டேன் அம்மா’ என ரஜினி சத்தியம் செய்தார். சொன்னதுபோல கொஞ்சம் மாறி இருந்தார் ரஜினி.

ரஜினி அப்போது மருத்துவர் செரியனிடம் மனநல சிகிச்சையும் பெற்றுவந்தார். ஒருநாள் செரியனிடமிருந்து அந்த அம்மாவுக்கு போன் வந்தது. ரஜினி மருத்துவமனயில் மிகவும் வயலண்டாக இருக்கிறார். அவர் அம்மா அம்மா என உங்கள் பெயரை சொல்கிறார். நீங்கள் இங்கே உடனே வாங்க’ என சொல்ல ரெஜினா அங்கே விரைந்து சென்றார். அங்கே மருத்துவர்களும், செவிலியர்களும் ரஜினியிடம் மல்லுக்கட்டி கொண்டிருந்தார்கள். அந்த அம்மா ரஜினியை சமாதனப்படுத்த ஹாஸ்பிட்டலில் இருந்து ரஜினி வெளியேறி அந்த அம்மாவின் வீட்டுக்கு போனார்.

‘நான் இங்கேயே கொஞ்சநாட்கள் தங்கலாமா?’ என ரஜினி கேட்க அந்த ரெஜினாவும் சம்மதித்தார். அடுத்தநாள் நேற்று நன்றாக தூங்கியதாக ரஜினி சொல்ல அது செரியனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அந்த அம்மாவிடம் ‘நீங்கள் ஒருவருக்கு மறுவாழ்வு கொடுத்திட்டீங்க’ என பாராட்டினார். அந்த அம்மா செலுத்திய அன்பில் மாறிய ரஜினி படப்பிடிப்புக்கு ஒழுங்காக போனார். அவரோடு தன்னுடைய வேலைக்காரர்களை அனுப்பி பார்த்துக்கொண்டு, படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வரசொன்னார் ரெஜினா. மொத்தத்தில் ரெஜினா அம்மா பெறாத மகனாகவே ரஜினி மாறியிருந்தார்.

அந்த வீடு. அந்த அம்மா மற்றும் குழந்தைகளின் அன்பு என ரஜினி மொத்தமாக மாறினார். ஒருநாள் அந்த அம்மா அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது. ’நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்?’ என புலம்பிய ரஜினிக்கு நல்ல அறிவுரைகளை சொல்லிவிட்டு போனார் ரெஜினா.

சில மாதங்கள் கழித்து அவர் திரும்பி வந்தபோது ரஜினி நன்றாகவே மாறியிருந்தார். அதோடு, லதாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் இருந்தார். ரெஜினா அம்மாவுக்கும் மிகவும் சந்தோஷம். ரஜினி திருமண வாழ்க்கையில் நுழைந்து ஒருகட்டத்தில் சூப்பர்ஸ்டாராக வளர்ந்துவிட ரெஜினா அம்மா சமூக சேவகியாக மாறி பல நன்மைகளை மக்களுக்கு செய்தார்.

80களில் பிரபலமான சமூக சேவகி இவர். மதர் தெரசா சமூக நல அமைப்பின் சென்னை நகர பொறுப்பாளராக இருந்தவர் இவர். இயற்கை வைத்தியத்தில் பல்வேறு பட்டங்களையும் பெற்றிருக்கார். ஆனாலும், அதை தொழிலாக செய்யாமல் தனக்கு தெரிந்தவர்கள், நண்பர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே சிகிச்சை செய்துவந்தார். அவரது அன்பிலும், சிகிச்சையிலும் மாறியவர்தான் ரஜினி.

தர்மயுத்தம் படத்தில் ரஜினி பாடும் பாடல் வரிகள் இப்படி வரும்..

கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா..

முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா..

என் ஆலயம் பொன் கோபுரம் ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா..

எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள்!…

  • 601
  • More
சினிமா செய்திகள்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு