சினிமா செய்திகள்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
Ads
 ·   ·  7526 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கோடிக்கணக்கான சொத்துக்களை தானம் செய்துவிட்டு துறவறம் பூண்ட செல்வந்தர்கள்

கடந்த ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வைர வியாபாரியும் இவரது மனைவியும் தங்களுடைய சொத்துக்களை தான தர்மம் செய்து விட்டு சன்னியாசிகளாயினர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களது 12 வயது மகனும் துறவியானர். ஜைன மத சமய தர்மத்தின் படி, இவர்கள் உலகத்தையும் அதன் செல்வங்களையும் பொருளுலகத்தையும் ஆசைகளையும் பாசங்களையும் துறக்க ‘தீஷை’ பெற்றவர்கள். ஆனால், தீஷை பெறுவதற்கு ஃபெராரியிலும் ஜாகுவார் காரிலும் வருவார்கள். 

அதே போல், 2017-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜைன மத தம்பதியினர் சுமித் மற்றும் அனாமிகா ரூ.100 கோடி பெறுமான சொத்துக்களைத் துறந்து தீஷை பெற்று துறவிகளாயினர். சுமித்திற்கு வயது 35, அனாமிகாவின் வயது 34. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் மைனர். எனவே, இவர்கள் தீஷை பெறக் கூடாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் தடுக்க முயன்றனர். மகளை அத்ரதையாக விட்டு விட்டு இவர்கள் தீஷை பெறுவது மனித உரிமைக்கு எதிரானது என்று அவர்கள் வாதிட்டனர். 

மகள் இப்யாவுக்கு என்ன ஏற்பாடுகளை இவர்கள் செய்துள்ளனர் என்று குஜராத் மாநில அரசு குழந்தைகள் உரிமைகள் அமைப்பு சிவில் மற்றும் போலீசாரிடம் அறிக்கை சமரிப்பிக்கக் கோரியதும் கவனிக்கத்தக்கது. பிறகு இவர்கள் குழந்தை இப்யாவின் எதிர்காலத்துக்குரியதை ஏற்பாடு செய்து கொடுத்தது உறுதி செய்யப்பட்ட பின்பே தீஷை சாத்தியமானது. மேலும், அனாமிகாவின் உறவினர் ஒருவர் குழந்தையை வளர்க்க தானே மனமுவந்து ஒப்புக் கொண்ட நற்செய்தியும் வெளியானது. 

இதன் பின்னணியில் பார்த்தோமானால் சமீபத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாக இன்னுமொரு குஜராத் தொழிலதிபரும் அவரது மனைவியும் ரூ.200 கோடி சொத்துக்களைத் துறந்து சன்னியாசம் பெற்றுக் கொண்டனர். இந்த தம்பதியினர் குஜராத் மாநிலம் ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர்கள். பவேஷ் பண்டாரி என்ற இந்த தொழிலதிபர் கட்டுமானத் தொழிலில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது 200 கோடி ரூபாய் சொத்துக்களை தான தர்மத்துக்கு எழுதி வைத்து விட்டு தீக்‌ஷை பெற்றார். 

இந்த தம்பதியினரின் 19 வயது மகள், 16 வயது மகள் இவர்களுக்கு முன்னரே 2022-ம் ஆண்டிலேயே துறவறம் மேற்கொண்டு விட்ட்னார், தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை என்ற பழமொழி தலைகீழாக்கப்பட்டு, வாரிசுகள் எவ்வழியோ பெற்றோர் அவ்வழி என்று இவர்கள் மகன், மகள் துறவறத்தினால் தாங்களும் துறவறம் மேற்கொண்டனர். ஜைன மத துறவற தர்மத்தின்படி இவர்கள் காலில் செருப்பு அணியக்கூடாது, அடுத்தவர் கொடுக்கும் உணவுகளைத் தான் சாப்பிட வேண்டும். மிகப்பெரிய வர்த்தக சமூகமான ஜெயின் சமூகத்தினர் தங்கள் மதத்தின் அறவொழுக்கங்களுக்கு ஏற்ப வாழ முடிவு செய்து வருவது ஜைன மத தலைவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருவதோடு ஜைன சமூகமே இதனை எண்ணி பெருமைப்படுகிறது.

  • 300
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads