அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்

1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவற்றையும் இழந்து மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். வறுமையால் வெல்லப்பட்டார். ஆழ்கடலில் முத்திருக்க, அலைகளால் கரையில் கொண்டு சேர்க்கப்படும் சாதாரண சிப்பியாக ஒதுங்கினார் மகாலிங்கம். எல்லாவற்றையும் இழந்தது மகாலிங்கம் என்ற தயாரிப்பாளர்தான்.

இசைக்கலைஞன் அல்லவே. கீழே விழுந்த மகாலிங்கத்தைத் தூக்கி நிறுத்தினார் கவியரசு கண்ணதாசன். கண்ணதாசன் தான் சொந்தமாகத் தயாரித்த முதல் படமான 'மாலையிட்ட மங்கை'யில் துணிந்து மகாலிங்கத்தை நாயகனாக ஒப்பந்தம் செய்தார். 'செந்தமிழ் தேன்மொழியாள்' இன்றுவரை செந்தமிழைப் போல ரசிகர்களின் நெஞ்சில் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

உச்சஸ்தாயிலேயே பாடி பழக்கப்பட்ட டி.ஆர்.மகாலிங்கத்தை மென்மையான குரலில் பாடவைக்க முடியுமா? உயரமாய் பறக்கும் பருந்தை செல்லமாக குழையும் சிட்டுக்குருவியாக்க முடியுமா? ஆனால், மென்மையான பாடலைப் பாடவைத்து, தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக்கிக் காட்டினார்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. மாலையிட்ட மங்கையில் வரும் 'நானன்றி யார் வருவார்?' பாடல் மென்மையின் மேன்மையைச் சொல்லும்.

சந்தத்திலிருந்து பிசகாமல் கவிமணம் வீசும் கண்ணதாசனின் பாடல் வரிகள், பழைமையின் பக்குவத்தை மீறாத விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மெட்டுகள், உச்சஸ்தாயில் ஊர்வலம் போகும் மகாலிங்கத்தின் மயக்கம் தரும் குரல். இவைதான், மாலையிட்ட மங்கையை மங்களகரமாக மாற்றியது. 'எங்கள் திராவிடப் பொன்னாடே' பாடலும் மிகப் பிரபலம்.

'மாலையிட்ட மங்கை' மகாலிங்கத்தின் கழுத்தில் மாலையிட்ட மங்கையானது. படம் அமோக வெற்றி. சரிவில் இருந்து மீண்டார் டி.ஆர்.மகாலிங்கம். 1959-ம் ஆண்டு வெளியான 'அமுதவல்லி', பாடல்களின் இன்பவல்லி. பட்டுக்கோட்டை என்ற தமிழர்களின் பாட்டுக்கோட்டையோடு விஸ்வநாதன் ராமமூர்த்தியின் ஜனரஞ்சகமான மெட்டில் ஆடை கட்டிக் கொண்டது நிலவு. அமுதவல்லியின் 'ஆடைகட்டி வந்த நிலவோ' பாடலை ரசிக்காதவர்கள் யார்?

1960-ம் ஆண்டு - எழுத்தாளர் எல்லார்வி எழுதிய ''கலீர் கலீர்'' நாவல்தான் 'ஆடவந்த தெய்வம்' ஆனது. முக்கோணக் காதல் கதை. டி.ஆர்.மகாலிங்கத்தோடு ஈ.வி.சரோஜா, அஞ்சலி தேவி ஆகியோர் நடித்திருந்தனர். சாஸ்திரிய சங்கீத காதலர்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்த மகாலிங்கம், இந்தப் படத்தில் சாதாரண மக்களுக்கும், சங்கீத சாதம் பரிமாறியிருப்பார். அவர்களது குரலில் தன்னை உருமாற்றியிருப்பார். 'மழை கொட்டு கொட்டு கொட்டுது பாரு இங்கே' பாடல் எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், எல்லோரையும் சமமாகப் பார்க்கும் சோசலிசத்தையும் சொல்லியது.

'ரத்தினபுரி இளவரசி'யில், காதலுக்கு நாலு கண்கள், கவலையில்லாத மனிதனில், நான் தெய்வமா? இல்லை நீ தெய்வமா? என மகாலிங்கம் நடித்த படங்களில் ஓரிரு பாடல்கள் வெற்றியடைந்தாலும், படங்கள் தோல்வியைத் தழுவின.

1960-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, அந்தி வானத்து ஆதவன் போல டி.ஆர்.மகாலிங்கத்தின் கலையுலக வாழ்வு அஸ்தமனத்திற்கு அடிகோலத் தொடங்கியது. ஆனால், 1965-ல் A.P. நாகராஜனின் 'திருவிளையாடல்' டி.ஆர். மகாலிங்கத்தின் பெயரைத் திரும்பிய திசையெல்லாம் மீண்டும் ஒலிக்கச் செய்தது. இசைத்தமிழை அவர் இசைத்தது, இன்றுவரை அருஞ்சாதனையாக ரசிகர்கள் மனதில் அகலாமல் இருக்கிறது.

  • 281
  • More
சினிமா செய்திகள்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு