சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

அரசாங்கம் தமிழ்நாட்டு மீனவர்களையும் எமது வடபகுதி மீனவர்களையும் முட்டிமோத வைக்கின்றது

எல்லை மீறிய  இந்திய மீனவர்களுடைய பிரச்சனையை அரசாங்கம் தமிழ்நாட்டு மீனவர்களையும் எமது வடபகுதி மீனவர்களையும் முட்டிமோத வைக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதாக  தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் இன்ப நாயகம் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது:யாழ் மாவட்டத்தில் மீனவர்கள் எதிர் நோக்குகின்ற முரண்பாடுகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக அதற்கான தீர்வை பெறுகின்ற வகையில் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அந்த வகையில் அண்மைக்காலமாக குறிப்பாக வட பகுதியில் வடமராட்சி, வடமராட்சி கிழக்கு போன்ற பிரதேசங்களில் இந்திய இழுவைப் படகினுடைய வருகை அதிகரித்து காணப்படுகிறது.இதனால் அப்பிரதேச மீனவர்கள் பாரிய இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் அதனுடைய தாக்கம், பாதிப்பின் காரணமாக தொழில் மற்றும் சந்தைப்படுத்தல் தேவைகள் முடக்கப்பட்டுள்ளன.இந்த இக்கட்டான சூழலில் அவர்களுடைய தொழில் வளங்கள் பாதிப்புக்கு உட்பட்டுள்ளது. நாளாந்தம் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய குடும்பங்களின் ஏனைய உறவுகளின், அவர்கள் சார்ந்த அங்கத்தவர்களின், அவர்களில் தங்கியிருக்கின்ற இதர தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது.இந்திய இழுவைப் படகுகள் யுத்தம் முடிவடைந்தத பன்னிரண்டு வருட காலமாக அதிகரித்துச் செல்கிறது. இந்தச் சந்தர்ப்பத்திலே தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் அந்த விடயங்களுக்கு தீர்வு காணக்கூடிய வகையிலே பல்வேறுபட்ட தீர்வு முயற்சிகளை மேற்கொண்டு வந்த பொழுதிலும், அரசாங்கம், அரசாங்க கட்சிகள், அரசியல் தலைமைகள், அவற்றிற்க்கு தீர்வு வழங்கக்கூடிய வகையில் கையாளாமல் வெறுமனே ஒரு அரசியல் நோக்கத்திற்காக, அரசியல் லாபத்திற்காக, பயன் படுத்துகின்ற போக்கை அவதானிக்க முடிகிறது.அண்மைக்காலத்தில் இந்திய இழுவைப் படகுகள் அதிகரித்துச் செல்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்றால் இதற்கு அரசாங்கமும் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து செயற்படுகின்ற அரசியல் தலைமைகள், அமைச்சர்களே காரண கர்த்தாக்களாக இருக்கின்றனர்.  இந்தவகையில் இது தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் எமது வடபகுதி மீனவர்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சந்தர்ப்பமாக மாறுகிறது.  அரசாங்கம் அரசியல் மற்றும் ஏனைய நோக்கங்களுக்காக இந்த விவகாரத்தை கையாளுவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  • 790
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads