சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

முறிகண்டி உள்ளிட்ட பிரதேசத்தின் நிர்வாக கட்டமைப்பை கிளிநொச்சியுடன் இணையுங்கள் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

முறிகண்டி உள்ளிட்ட பிரதேசத்தின் நிர்வாக கட்டமைப்பை கிளிநொச்சியுடன் இணையுங்கள் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.அக்கட்சியின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்களால் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டது.இதன் போது கருத்து தெரிவித்த அக்கட்சியின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான கணேசபிள்ளை கருத்து தெரிவிக்கையில்,முறிகண்டி பிரதேசத்தில் இறக்கும் மக்களின் உடல்களை கொவிட் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்ப கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.அதற்கான வசதிகளை அவர்கள் செய்து கொடுப்பதும் இல்லை. அப்பகுதி மக்கள் வறுமையில் உள்ள நிலையில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.செல்வதற்கு 58 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியதுடன், அதேயளவு தூரம் திரும்பவும் வேண்டி உள்ளது. இதற்கான போக்குவரத்து செலவு தூரத்துக்கு அமைவாக அதிகம் செலவாகின்றது.அங்கு முடிவுகளை பெற்று சடலத்தை கொண்டு வரும் வரை 3 நாட்கள் நிற்க வேண்டும். அங்கு நிற்பதற்கு இடங்களும் இல்லை என்பதுடன் கடை வசதிகளும் இல்லை.தற்பொழுது இருக்கும் சூழலில் பொருளாதார நிலையில் இருக்கின்ற பணத்தையும் செலவழித்து பெரும் துன்பங்களை அப்பகுதி மக்கள் எதிர் கொள்கின்றனர்.இதனை தவிர்ப்பதற்கு மாங்குளம் வைத்தியசாலையை பலப்படுத்தி அங்கு PCR பரிசோதனையை மேற்கொள்ள இந்த அரசாங்கத்தின் ஊடாக சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அந்த மக்களிற்கு சடலங்களை வைத்தெடுக்க இலகுவாக இருக்கும்.அல்லது, முறிகண்டி பிரதேசத்தை கிளிநொச்சி மாவட்டத்துடன் இணைத்துவிட வேண்டும். இதில் ஒன்றை மேற்கொண்டால் அப்பகுதி மக்களிற்கு இலகுவானதாக இருக்கும்.நுகர்வு, பாடசாலை மற்றும் வைத்தியசாலை உள்ளிட்ட தேவைகளிற்கு கிளிநொச்சிக்கே செல்கின்றோம். ஆனால் நிர்வாக செயற்பாடுகளிற்காக முல்லைத்தீவு கச்சேரிக்கும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கும் இறப்புக்கள் நடந்தால் இவ்வாறு வைத்தியசாலைக்கும் செல்லவேண்டி உள்ளது.தற்பொழுது உள்ள சூழலில் வைத்தியர்கள், சுகாதார தரப்பினர் செய்யும் பணிகளிற்கு நன்றி சொல்கின்றோம்.இவ்வாறான நிலையில் அண்மையில் இறந்த குமரன் கோபால் என்பவரை முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் 3 நாள் பரிசோதனை முடிவுக்காக வைத்திருந்துவிட்டு, உடலத்தை பாரமெடுத்து செல்லுமாறு உறவினர்களுக்கு அறிவித்தல் விடுக்கின்றனர்.காலை சென்ற குடும்பத்தினரிடம் 11 மணி வரை மரண விசாரணைகள் இடம்பெற்று சடலத்தை குடும்பத்தினர் பாரமெடுக்க சென்ற போது சடலம் மாறியுள்ளது. குறித்த நபரின் சடலத்துக்கு மாறாக கொவிட் தொற்றாளர் ஒருவரின் சடலமே அங்கு காணப்பட்டது.இவ்வாறான தவறுகளை சாதாரணமாக விட முடியாது. குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருக்கவும், மக்களின் நிர்வாக இலகுபடுத்தலிற்காகவும் குறித்த பகுதியை கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்துடன் இணைப்பதே பொருத்தமானது என அவர் குறிப்பிட்டார்.இதேவேளை அங்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான பிரான்சிஸ் ஜோசப் குறிப்பிடுகையில்,கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் மிக வறுமையில் உள்ள மக்கள். அவர்களிற்கு வழங்கப்படும் 2000 ரூபா பணம் போதாது. கடந்த காலத்தில் 5000 ரூபா வழங்கப்பட்ட போதும் அது போதுமானதாக இருக்கவில்லை.இந்த நிலையில் வழங்கப்படும் 2000 ரூபா போதுமானதாக இருக்காது. அதை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

  • 712
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads