சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

இரணைமடு சந்தி வீதியில் இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின் பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் இடிக்க முடியும்

இரணைமடு சந்தி பகுதியில் வீதியில் இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின் பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் இடிக்க முடியும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டிவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் அமைந்திருக்கக்கூடிய இரணைமடு சந்தியை மையமாக வைத்து இராணுவத்தினரால் பாரிய வளைவு ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த வளைவை இடைநிறுத்தி உரிய அனுமதியின் பிரகாரம் அதனை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட தரப்பிற்கு பல தடவை அறிவித்திருக்கின்றோம்.இது தொடர்பாக சபைத் தீர்மானம் ஒன்றை பெற்று, சபையினுடைய 52வது பிரிவு அறிவுறுத்தலிற்கு அமைவாக அவற்றை இல்லாது செய்து விடுவதற்கும், அல்லது மேற்கொண்டு நீதிமன்றத்தை நாடுவதற்குமான தீர்மானத்தை நாங்கள் எடுத்திருக்கின்றோம். இது தொடர்பாக பொது மக்களால் பல்வேறு கருத்துக்கள் சபைக்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.கிளிநொச்சி நகரம் இன்று திட்டம்மிட்டு அமைக்கப்படாத காரணத்தினாலே இந்த நகரத்திலே அமைக்கப்படுகின்ற வளைவுகள், மற்றும் சின்னங்கள் நகர ஆக்கத்திற்கு உதவக்கூடிய வகையிலே பொருத்தமானவகையில் அமைப்பதற்கான அனுமதிகள் துறைசார்ந்த திணைக்களங்களுடன் இணைந்ததாக வழங்கப்பட வேண்டும் என எங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்ற வேளையில், இரணைமடு சந்தியிலே இராணுவத்தினரால் அனுமதி எதுவுமின்றி வளைவு கட்டப்படுகின்றமை தொடர்பில் பொது மக்களால் எமக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.இது தொடர்பிலே நாங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கைகளை எடுத்து, கட்டுமான பணிகளை நிறுத்துமாறு நாங்கள் அந்த கட்டடத்திலே ஒட்டியுள்ளோம். இந்த நிலையில் எழுத்து மூலமாக நகர்த்தல்களை செய்து கொண்டிருந்த நிலையில் பயணத்தடை அறிவிக்கப்பட்ட காரணத்தினாலும், பிரதேச சபையில் ஏற்பட்ட எதிர்பாராத கொவிட் தொற்று காரணமாகவும், அலுவலக பணிகளை நாங்கள் இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.இந்த இடைநிறுத்தப்பட்ட காலத்தினை பயன்படுத்தி இராணுவத்தினர் மேற்கொண்டு பணிகளை முன்னெடுத்து வருவதாக பொது மக்களால் மீண்டும் எமக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பணிகளை உடன் நிறுத்தி உரிய நடைமுறைகளை பின்பற்றி இராணுவத்தினர் அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.இலங்கை இராணுவத்தினர் ஒழுக்கம் உடையவர்களென கூறப்படும் நிலையில், இவ்வாறு மாவட்டத்தில் அரச நிர்வாக செயற்பாடுகளிற்கு மாறாக செயற்படுவதும், திருநகர் பகுதியிலே இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் கழிவு நீரை நீர் வடிகான் வழியாக வெளியேற்றுவதால் துர்நாற்றம் வீசி வருவது தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்களும் சபையினால் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்க முடியாதவை எனவும் அவர் குறிப்பிட்டார்.குறித்த கட்டுமானத்தினை பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் அகற்றுவதற்கும் பிரதேச சபைக்கு  அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்த அவர் அவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் பொழுது இராணுவத்தினர் ஆயுத முனையில் நிறுத்த முற்பட்டால் பொலிஸாரின் உதவி பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  • 793
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads