சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  663 news
  •  ·  15 friends
  • S

    23 followers

வரட்சி காலத்தில் தக்காளி செய்கையில் பாரிய அளவு வருமானம் கிடைப்பதில்லை, ஜே கே வி 2 எனும் இனத்தை பரீட்சார்த்தமாக மேற்கொண்ட கிளிநொச்சி விவசாயி

வட மாகாணத்தில் தக்காளி செய்கையும் பிரதான விவசாய உற்பத்தியாக இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் வரட்சி காலத்தில் தக்காளி செய்கையில் பாரிய அளவு வருமானம் கிடைப்பதில்லை எனவும், போதுமான விளைச்சல் கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், ஜே கே வி 2 எனும் இனத்தை ஒரு விவசாய நிறுவனத்தின் உதவியுடன் பரீட்சார்த்தமாக மேற்கொண்டார் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியை சேர்ந்த விவசாயியான மயில்வாகனம் ராயகோபால் எனும் விவசாயி.குறித்த கெலிஸ் விவசாய நிறுவனத்தினால் மாதிரி செய்கைக்காக வழங்கப்பட்ட ஜே கே வி 2 எனும் தக்காளி இனமானது, வழமை போன்று விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டும் தக்காளி செய்கையில் கிடைக்கும் விளைச்சலுக்கு மேலதிகமான விளைச்சலை இன்று பெற்றுக்கொடுத்துள்ளது.குறித்த தக்காளி இனம் தொடர்பில் மயில்வாகனம் ராயகோபால் இவ்வாறு தெரிவிக்கின்றார்.இந்த தக்காளி இனம் வழமையாக நாம் மேற்கொள்ளும் தக்காளி இனத்தை விட அதிகளவான விளைச்சலை பெற்று தந்துள்ளது. வழமையக மேற்கொள்ளும் தக்காளி செய்கையில் 6 கிலோ வரையிலான விளைச்சலை பெற்றுக்கொள்வோம். இது மாறாக மேலும் அதிக விளைச்சலை தருகினறது. இவ்வாறான தக்காளி இனத்தை இந்த பகுதிகளில் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டும் இவ்வாறான வரட்சி காலத்தில் மேற்கொண்டு அதிக வருவாயை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவிக்கின்றார்.வரட்சி காலத்தில் நோய், தேவைக்களவான நீர், அதிக விளைச்சலை கொடுக்கம் இந்த வகை தக்காளியை செய்கை செய்வதன் மூலம் அதிக வருவாயை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த விவசாயி நம்பிக்கை வெளியிடுகின்றார்.குறித்த தக்காளி இனம் தொடர்பில் கெலிஸ் விவசாய நிறுவனத்தின் வடமாகாண விற்பனைப்பிரதிநிதி குமாரசாமி புவனேந்திரா குறிப்பிடுகையில்,சிறுபோக காலத்தில் தக்காளி செய்கை வடமாகாணத்தில் போதிய விளைச்சல் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் இம்முறை இந்த தக்காளி இனத்தை பரீட்சார்த்தமாக மேற்கொண்டிருந்தோம். அந்த தக்காளி இனம் ஏனைய தக்காளி இனங்களை விட அதிக விளைச்சலை கொடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.குறித்த செய்கையாளரின் தக்காளி செய்கையை இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி அரசகேசரி சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது வரட்சியை தாங்கி அதிக விளைச்சல் கொடுத்துள்ள குறித்த தக்காளி இனம் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவிக்கின்றார்.வழமையாக சிறுபோக செய்கை காலத்தில் வெப்பநிலை அதிகமாக காணப்படும். இவ்வாறான காலநிலையில் தக்காளி செய்கை மேற்கொள்வது சவாலாக காணப்படும். அதனால் நாங்கள் கே சி 1 எனும் கிளிநொச்சிக்கான இனம் ஒன்றையை விவசாயிகள் பெற்று செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் அதில் விதை உற்பத்தி குறைவாக உள்ளது. அது தவிர பத்மா, மகேசு எனும் இரண்டும் அதற்கீடாக காய்ப்பதனால் விவசாயிகள் அதனையும் விரும்புகின்றனர். அவற்றுடன் இந்த இனமும் வெளி மாவட்டங்களில் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. அவற்றோடு ஒப்பிடும்போது இந்த இனம் அதிக விளைச்சலை கொடுப்பதாகவே நான் கருதுகின்றேன் என தெரிவித்தார்.நாளுக்கு நாள் விவசாய செய்கையில் புதிய தொழில்நுட்ப முறைகள், புதிய இனங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றது. அவ்வாறான இனங்களை அடையாளம் கண்டு விவசாயிகள் செய்கை மேற்கொண்டு அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ராயகோபால் என்ற விவசாயி வெளிப்படுத்துகின்றார்.

  • 605
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads