Category:
Created:
Updated:
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர் உற்சவம் காலை 9 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியில் முருகப்பெருமான் சிறிய தேரில் வலம் வந்தார்.நாடுபூராகவும் ஊரடங்கு அமுல் படுத்தப் பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சினால் ஆலயங்களுக்கு என வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களோடு சிறப்பாக தேர் உற்சவம் இடம்பெற்றது.