சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

இந்தியாவில் 21.5 சதவீதம் பேருக்கு கொரோனா தாக்கியதற்கு ஆதாரம்

ஒருவருக்கு கடந்த காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததா என்பதை கண்டறிவதற்கு கோவிட் சுவாச் எலிசா உபகரணம் மூலம் ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. இது செரோ சர்வே என அழைக்கப்படுகிறது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்திருந்தால், அவர்களுடைய உடலில் உருவாகியுள்ள ஆன்டிபாடியை (நோய் எதிர்ப்பு பொருள்) வைத்து கண்டறிந்து விட முடியும். இப்படி ஏற்கனவே இந்தியாவில் 2 முறை செரோ சர்வேக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 3-வது செரோ சர்வே 10 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மத்தியில் கடந்த டிசம்பர் 7-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரையில் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில், 700 கிராமங்கள் அல்லது வார்டுகளில் இந்த செரோ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதன் முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, டெல்லியில் நேற்று வெளியிட்டார். அது வருமாறு:-

* 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 28 ஆயிரத்து 589 பேரிடம் செரோ சர்வே நடத்தப்பட்டது. அதில் 21.4 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் தெரிய வந்துள்ளன.

* 10 முதல் 17 வயதுக்குட்பட்டோரில் 25.3 சதவீதம் பேர் கெரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்திருக்கிறார்கள்.

* நகர்ப்புற குடிசைப்பகுதிகளில், 31.7 சதவீதத்தினருக்கும், குடிசைகளற்ற பகுதிகளில் 26.7 சதவீதமும் கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் 23.4 சதவீதம்பேருக்குத்தான் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

* 60 வயதுக்கு மேற்பட்டோரில் 23.4 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.

* 7,171 சுகாதார பணியாளர்களின் ரத்த மாதிரியும் இந்த செரோ சர்வேயின்போது சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அவர்களில் 25.7 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது தெரியவந்தது.

இவ்வாறு அவர் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

நமது நாட்டின் மக்கள் தொகை சுமார் 130 கோடி ஆகும். 21.5 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்திருப்பது தெரிய வந்துள்ள நிலையில், மொத்தம் சுமார் 27 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் வந்து, மீண்டிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

அதே நேரத்தில் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு விகிதம், 5.42 சதவீதமாக உள்ளது. பாதிப்பின் அளவு குறைந்து வருகிறது. கடந்த வாரத்தின் வாராந்தரி பாதிப்பு விகிதம் 1.82 சதவீதமாக இருந்தது என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அத்துடன், கடந்த 3 வாரங்களில் 47 மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தாக்குதல் இல்லை. அதுபோலவே இந்த கால கட்டத்தில் 251 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் இறக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

  • 635
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads