சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  663 news
  •  ·  15 friends
  • S

    23 followers

இந்தியாவில் 21.5 சதவீதம் பேருக்கு கொரோனா தாக்கியதற்கு ஆதாரம்

ஒருவருக்கு கடந்த காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததா என்பதை கண்டறிவதற்கு கோவிட் சுவாச் எலிசா உபகரணம் மூலம் ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. இது செரோ சர்வே என அழைக்கப்படுகிறது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்திருந்தால், அவர்களுடைய உடலில் உருவாகியுள்ள ஆன்டிபாடியை (நோய் எதிர்ப்பு பொருள்) வைத்து கண்டறிந்து விட முடியும். இப்படி ஏற்கனவே இந்தியாவில் 2 முறை செரோ சர்வேக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 3-வது செரோ சர்வே 10 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மத்தியில் கடந்த டிசம்பர் 7-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரையில் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில், 700 கிராமங்கள் அல்லது வார்டுகளில் இந்த செரோ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதன் முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, டெல்லியில் நேற்று வெளியிட்டார். அது வருமாறு:-

* 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 28 ஆயிரத்து 589 பேரிடம் செரோ சர்வே நடத்தப்பட்டது. அதில் 21.4 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் தெரிய வந்துள்ளன.

* 10 முதல் 17 வயதுக்குட்பட்டோரில் 25.3 சதவீதம் பேர் கெரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்திருக்கிறார்கள்.

* நகர்ப்புற குடிசைப்பகுதிகளில், 31.7 சதவீதத்தினருக்கும், குடிசைகளற்ற பகுதிகளில் 26.7 சதவீதமும் கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் 23.4 சதவீதம்பேருக்குத்தான் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

* 60 வயதுக்கு மேற்பட்டோரில் 23.4 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.

* 7,171 சுகாதார பணியாளர்களின் ரத்த மாதிரியும் இந்த செரோ சர்வேயின்போது சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அவர்களில் 25.7 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது தெரியவந்தது.

இவ்வாறு அவர் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

நமது நாட்டின் மக்கள் தொகை சுமார் 130 கோடி ஆகும். 21.5 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்திருப்பது தெரிய வந்துள்ள நிலையில், மொத்தம் சுமார் 27 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் வந்து, மீண்டிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

அதே நேரத்தில் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு விகிதம், 5.42 சதவீதமாக உள்ளது. பாதிப்பின் அளவு குறைந்து வருகிறது. கடந்த வாரத்தின் வாராந்தரி பாதிப்பு விகிதம் 1.82 சதவீதமாக இருந்தது என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அத்துடன், கடந்த 3 வாரங்களில் 47 மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தாக்குதல் இல்லை. அதுபோலவே இந்த கால கட்டத்தில் 251 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் இறக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

  • 513
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads