சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

யாழ் ஜாம்பவான்கள் நீதிமன்றங்களிற்கு போய் காணி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியதுதானே: அங்கஜன்!

வேலணைப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (25) இடம்பெற்ற போது, காணி சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம் நடந்தது. வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டைதீவு, மண்கும்பான் புங்குடுதீவு பகுதிகளில் 79 குடும்பங்களிற்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படையினால் சுவீகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர், கூட்ட மண்டபத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட போராட்டம் நடந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஷ் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் கூட்டத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு நடத்தினார். ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு வருமாறும், அங்கு பேசலாம் என்றும் தெரிவித்தார். எனினும், அதை மறுத்த கஜேந்திரகுமார், மக்களிற்கான நிரந்தர தீர்வை வழங்கும்படி வலியுறுத்தினார்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பித்த போது, மக்களின் போராட்டத்திற்கு பதில் கூறிவிட்டு கூட்டத்தை ஆரம்பிக்கும்படி கஜேந்திரன் எம்.பி வலியுறுத்தினார். அவர்கள் போராடுகிறார்கள். அழைத்தேன். வரவில்லை. கூட்டத்தின் முடிவில் பேசுகிறேன் என அங்கஜன் தெரிவித்தார். கஜேந்திரன் விடாப்பிடியாக உடனடியாக அந்த விடயத்தை ஆராய வேண்டுமென கூறினார். அங்கஜன் மறுத்தார். இந்த இழுபறி நீடித்த போது, வேலணை பிரதேசசபையின் ஐ.தே.க, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், அங்கஜனை காப்பாற்ற தலையிட்டனர்.

காணி விவகாரம் ஆராயப்பட்டு, அந்த காணி மக்களிற்கே வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன், சிறிதரனும் வலியுறுத்தினர். பின்னர் காணி விவகாரம் ஆராயப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு ஆராயப்பட்டது. காணி உரிமையாளர்கள் கண்ணீருடன் தமது நிலைமையை தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த காணிகள் மக்களிற்கே சொந்தமென்றும், அந்த நிலைப்பாட்டை சம்பந்தப்பட்ட அமைச்சிற்கு அறிவிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

“காணி சுவீகரிப்பு இந்த அரசாங்கத்தில் மட்டும் நடக்கவில்லை. சென்ற அரசாங்கத்திலும் இச் செயற்பாடு இடம்பெற்றது. எமது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நில ஆக்கிரமிப்பினை அபிவிருத்திக்குழுத் தலைவர் என்ற அடிப்படையில் நிச்சயமாக சம்பந்தப்பட்ட அமைச்சிற்கு இச் செய்தியை கொண்டு செல்வேன். நில ஆக்கிரமிப்பு செயற்பாடு பிரதேச செயலரால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயத்தை செய்ய முடியாது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் உரிய தரப்பினரை வலியுறுத்துவோம்.

எனினும், மற்றொரு வழியிலும் இந்த பிரச்சனையை தீர்க்கலாம். காணிப்பிரச்சனை பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். இங்கு நிறைய ஜாம்பவான்கள் உள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணிகளான அந்த ஜாம்பவான்கள் உள்ளனர். ஏன் இந்த போராட்டத்திலும் அந்த ஜாம்பவான்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்ந்து தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அந்தவகையில் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இப் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றுவோம் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

  • 823
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads