சினிமா செய்திகள்
இயக்குநர் நாகேந்திரன் காலமானார்
இளம் திரைப்பட இயக்குநர் நாகேந்திரன் இன்று (ஏப்.26) காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவரது திடீர் மரணம் சக திரை
நிராகரிக்கப்பட்ட அதே பாடல் பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பாடப்பட்டது
மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன் (கோபி). படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மி
'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...' எப்படி உருவானது தெரியுமா?
'அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்புத் தளத்தில் பாடலுக்கான கலந்துரையாடலில் எம்.எஸ்.வியிடம் பாலசந்தர் பேசிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் எல்லா வேல
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நடன இயக்குநர் ஸ்ரீதர்
பழம்பெரும் நடன இயக்குநர்களைத் தேடிப்பிடித்து கௌரவித்து வருகிறார் நடன இயக்குநர் ஸ்ரீதர்.‘நாக்க முக்க’ பாடலுக்கு நடனம் அமைத்தது மூலம் தமிழ் ரசிகர்களைக்
ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குநர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
எஸ்.வி.சேகர் யாரென்றே எனக்கு தெரியாது - சீரியல் நடிகை பேட்டி
76 வயதான எஸ்.வி சேகர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மீனாட்சி சுந்தரம் என்ற தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஷோபனா என்பவர் நடிக்க
கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி ச
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
Ads
 ·   ·  2883 news
  •  ·  1 friends
  • 2 followers

கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும்

கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  

இலங்கை - இந்தியா இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்கு நேற்றையதினம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.  

கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் வகையில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிராகவே இந்த வழக்குத் தொடரப்பட்டது.

கச்சத்தீவை மீட்கக் கோரி அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளராக இருந்த மறைந்த ஜெயலலிதா, ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்டோர் சார்பிலும் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதியரசர் சஞ்சீவ் கன்னா, நீதியரசர்கள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  

அப்போது, மனுதாரரான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பி.வில்சன் முன்னிலையானார்.

"கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்க 1974 ஆம் ஆண்டு ஜூன் 26 மற்றும் 28 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும்,1976 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தமும் அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் இந்த ஒப்பந்தங்கள் கேள்விக்குரியவை என சட்டத்தரணி நீதிமன்றில் தமது தரப்பு வாதத்தை முன்வைத்திருந்தார்.

மேலும், மனுதாரரான மறைந்த மு.கருணாநிதிக்குப் பதிலாக தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலுவை வழக்கில் இணைக்க வேண்டும் என்றும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதியரசர்கள் ஆயம், இந்த வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு திகதியிட்டது.

000

  • 890
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads