சினிமா செய்திகள்
நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி
பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.காமெடியில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி, 1965-ம் ஆண்டில் நட
எம்.கே.தியாகராஜ பாகவதர்
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள். விழிப்புணர்வோடு இருங்கள்.இந்த எச்சரிக்கையை தன் வாழ்வில் அனுபவபூர்வமாக, அணுஅணுவாக அனுபவித்த
எஸ்பிபி பற்றி பகிர்ந்து கொண்ட நடிகர் பிரபு
சமீபத்தில் நடிகர் பிரபுவின் பேட்டி ஒன்றில் எஸ்பிபி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார் நடிகர் பிரபு.'அடிமைப்பெண்' படம் வந்த சமயத்தில்
பாடகி ஸ்ரேயா கோஷல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நடிகை ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் பிரபலமான பாடகியாக இருந்து வருகிறார். அவரது குரலுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.தற்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட
கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு - தமன்னாவின் அறிக்கை
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக கூறி, புதுச்சேரியை சேர்ந்த 10 பேரிடம் ரூ. 60 கோடியே 60 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.இத
பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள கண்ணப்பா படத்தின் டீசர் 2 இதோ .....
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்து உருவாகியுள்ள திரைப்படம் கண்ணப்பா. இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவரும் ஹீரோ விஷ
பிரபல ஹாலிவுட் நடிகர்  ஜீன் ஹேக்மேன் மர்ம மரணம்
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜீன் ஹேக்மேன்.. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜீன் ஹேக்மேன் இரண்டு முறை ஆஸ்கார் விருதும் வென்றுள்
கேப்டன் விஜயகாந்த் பற்றிய கூறிய பொன்னம்பலம்
ஒருநாள் கேப்டனின் சண்டைக்காட்சி. ஹிந்தி வில்லன் வரவில்லை என்பதால் ஷூட்டிங் கேன்சல் ஆகி வெளியே வந்து கொண்டிருந்தார் கேப்டன். நான் ஒரு ஓரமாக பான் பராக்
நகைச்சுவை சக்கரவர்த்தி தங்கவேலு
1971-ல் ஆனந்த விகடனில் வந்த பேட்டிகேள்வி- " நீங்கள் இருவரும் இப்போதெல்லாம் படங்களில் ஏன் நடிப்பதில்லை ? நீங்களாக ஒதுங்கிவிட்டீர்களா? அல்லது திரையுலகம்
‘ரன்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
நடிகர் பாலாஜி முருகதாஸ் தனது திறமையான நடிப்பின் மூலம் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான 'ஃபயர்’ திர
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி
யேசுதாஸ், கடந்த சில நாட்களாகவே பெரிதாக இசை உலகில் ஆக்டிவாக இல்லை. 85 வயதாகும் இவர், தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்
 L2 : எம்புரான் படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'L 2: எம்புரான்' எனும் திரைப்படத்தில் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' மற்று
Ads
 ·   ·  2618 news
  •  ·  1 friends
  • 1 followers

இன்றுமுதல் மார்ச்‌ 19 ஆம்‌ திகதி நண்பகல்‌ 12.00 மணி வரை தேர்தலுக்கான வைப்புப்‌ பணம்‌ கையேற்கும்‌ நடவடிக்கைகள்‌ இடம்பெறும் - தேர்தல் ஆணைக் குழு

.........

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனை அறிவித்துள்ளார்.

அதன்‌ பிரகாரம்‌, இன்று (03) முதல் மார்ச்‌ மாதம்‌ 19 ஆம்‌ திகதி நண்பகல்‌ 12.00 மணி வரை தேர்தலுக்கான வைப்புப்‌ பணம்‌ கையேற்கும்‌ நடவடிக்கைகள்‌ இடம்பெறுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இக்காலகட்டத்தின்‌ இடையிலே வரும்‌ 2025 மார்ச்‌ 13 ஆம்‌ திகதி போயா தினம்‌, 2025 மார்ச்‌ 08, 09, 15, 16 ஆம்‌ சனி, ஞாயிறு தினங்கள்‌ தவிர்ந்த) தினங்களில் இந்நடவடிக்கைகள் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், தேர்தலுக்கான வேட்புமனு (பெயர்‌ குறித்த நியமனங்களை) கையேற்கும்‌ நடவடிக்கைகள்‌ மார்ச்‌ 17 – 19 ஆம்‌ திகதி வரை மு.ப. 8.30 மணி தொடக்கம்‌ பி.ப. 4.15 மணி வரையும்‌ மற்றும் மார்ச்‌ 20 நண்பகல்‌ 12.00 மணி வரையும் அந்தந்த மாவட்டத்‌ தெரிவத்தாட்சி அலுவலர்‌, மாவட்டச்‌ செயலாளர்‌ / அரசாங்க அதிபர்‌ அலுவலகத்தில்‌ இடம்பெறுமெனவும்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 28 மாநகர சபைகள்‌, 36 நகர சபைகள்‌, 272 பிரதேச சபைகள்‌ ஆகிய 336 உள்ளூரதிகார சபைகளுக்கான தேர்தல்களே இவ்வாறு நடத்தப்படவுள்ளன.

ஆயினும் அம்பாறை மாவட்டத்தில்‌ கல்முனை மாநகர சபை மற்றம்‌ தெஹியத்தகண்டிய பிரதேச சபை, மன்னார்‌ மாவட்டத்தில்‌ மன்னார்‌ பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டத்தில்‌ பூநகரி பிரதேச சபை, காலி மாவட்டத்தில்‌ எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களே இவ்வாறு நடத்தப்படவுள்ளன.

மாநகர முதல்வர்கள்‌, பிரதி மாநகர முதல்வர்கள்‌, தவிசாளர்கள்‌, பிரதி தவிசாளர்கள்‌ மற்றும்‌ உறுப்பினர்களைத்‌ கேர்ந்தெடுப்பதற்காக வேட்புமனு பத்திரங்கள்‌ கையேற்பது பற்றிய அறிவித்தல்‌ ஏற்கனவே குறித்த உள்ளூரதிகார சபைகளில்‌ பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறும் தினம் தொடர்பில் மார்ச் 20ஆம் திகதி வேட்புமனு கையேற்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து அறிவிக்கப்படுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது

  • 209
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads