சினிமா செய்திகள்
நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி
பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.காமெடியில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி, 1965-ம் ஆண்டில் நட
எம்.கே.தியாகராஜ பாகவதர்
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள். விழிப்புணர்வோடு இருங்கள்.இந்த எச்சரிக்கையை தன் வாழ்வில் அனுபவபூர்வமாக, அணுஅணுவாக அனுபவித்த
எஸ்பிபி பற்றி பகிர்ந்து கொண்ட நடிகர் பிரபு
சமீபத்தில் நடிகர் பிரபுவின் பேட்டி ஒன்றில் எஸ்பிபி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார் நடிகர் பிரபு.'அடிமைப்பெண்' படம் வந்த சமயத்தில்
பாடகி ஸ்ரேயா கோஷல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நடிகை ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் பிரபலமான பாடகியாக இருந்து வருகிறார். அவரது குரலுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.தற்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட
கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு - தமன்னாவின் அறிக்கை
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக கூறி, புதுச்சேரியை சேர்ந்த 10 பேரிடம் ரூ. 60 கோடியே 60 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.இத
பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள கண்ணப்பா படத்தின் டீசர் 2 இதோ .....
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்து உருவாகியுள்ள திரைப்படம் கண்ணப்பா. இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவரும் ஹீரோ விஷ
பிரபல ஹாலிவுட் நடிகர்  ஜீன் ஹேக்மேன் மர்ம மரணம்
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜீன் ஹேக்மேன்.. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜீன் ஹேக்மேன் இரண்டு முறை ஆஸ்கார் விருதும் வென்றுள்
கேப்டன் விஜயகாந்த் பற்றிய கூறிய பொன்னம்பலம்
ஒருநாள் கேப்டனின் சண்டைக்காட்சி. ஹிந்தி வில்லன் வரவில்லை என்பதால் ஷூட்டிங் கேன்சல் ஆகி வெளியே வந்து கொண்டிருந்தார் கேப்டன். நான் ஒரு ஓரமாக பான் பராக்
நகைச்சுவை சக்கரவர்த்தி தங்கவேலு
1971-ல் ஆனந்த விகடனில் வந்த பேட்டிகேள்வி- " நீங்கள் இருவரும் இப்போதெல்லாம் படங்களில் ஏன் நடிப்பதில்லை ? நீங்களாக ஒதுங்கிவிட்டீர்களா? அல்லது திரையுலகம்
‘ரன்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
நடிகர் பாலாஜி முருகதாஸ் தனது திறமையான நடிப்பின் மூலம் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான 'ஃபயர்’ திர
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி
யேசுதாஸ், கடந்த சில நாட்களாகவே பெரிதாக இசை உலகில் ஆக்டிவாக இல்லை. 85 வயதாகும் இவர், தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்
 L2 : எம்புரான் படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'L 2: எம்புரான்' எனும் திரைப்படத்தில் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' மற்று
Ads
 ·   ·  2618 news
  •  ·  1 friends
  • 1 followers

2025 சாம்பியன்ஸ் தொடர் - 44 ஓட்டங்களால் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா

வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட் எடுப்பின் துணையுடன் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி குழு நிலை ஆட்டத்தில் இந்திய அணியானது நியூஸிலாந்தை 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்த வெற்றியுடன் குழு ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியா, அரையிறுதி ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும். இந்த ஆட்டம் துபாயில் மார்ச் 04 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதேவேளை, தோல்வியைடந்த நியூஸிலாந்து அணியானது, அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கும்.

இந்த ஆட்டமானது மார்ச் 05 ஆம் திகதி லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெறும். இரு அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஒன்றுடன் ஒன்று பலப்பரீட்சை நடத்தும்.

துபாயில் நேற்றையதினம் நடைபெற்ற போட்டியில் 250 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற சேஸிங்கில் நியூஸிலாந்து அணிக்காக கேன் வில்லியம்சன் அதிகபடியாக 81 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணிக்கும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இறுதி குழு நிலைப் போட்டியானது நேற்று பிற்பகல் 02.30 மணிக்கு துபாயில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணியானது முதலில் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் ஸ்ரேயஸ் அய்யர் 79 ஓட்டங்களையும், ஹர்த்திக் பாண்டியா 45 ஓட்டங்களையும், அக்ஸர் படேல் 42 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து சார்பில் மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை அதிகபடியாக வீழ்த்தினார்.

பின்னர், 250 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியானது 45.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால், இந்தியா 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், போட்டியின் ஆட்டநாயகனானவும் அவர் தெரிவானார்.

000

 

 

  • 307
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads