சினிமா செய்திகள்
பல வருடங்கள் நாடக அனுபத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை தனது நகைச்சுவை மூலம் சொன்னவ
இணையில்லாத நடிகர் ரங்காராவ்
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
கேப்டன் விஜயகாந்த்  - இயக்குனர் கஸ்தூரி ராஜா சொன்ன தகவல்கள்
நான் இயக்கிய 'வீரம் விளைஞ்ச மண்ணு' படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அவருடைய தனிப்பட்ட குணங்களை இந்தப் படத்தின் மூலம்தான் தெரிஞ்
அஜித்குமாரின் விடாமுயற்சி முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது.
அஜித்குமாரின் சமீபத்திய படம் விடாமுயற்சி பைரசிக்கு இரையாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில், முழு திரைப்படமும் பல திருட்டு வலைத்தளங்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
Ads
 ·   ·  2566 news
  •  ·  1 friends
  • 1 followers

சட்டத்தை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் - வடக்கு ஆளுநர் – குழப்பத்தில் உரிமையாளர்கள்

வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அழகக சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (21.02.2025) நடைபெற்றது.

ஒரு சில அழகக நிலையங்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படுவது தொடர்பில் ஏற்கனவே ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதற்கு அமைவாக   கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

உள்ளூராட்சிமன்றங்களால் உரிமம் வழங்கப்படும்போது உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் சிகை அலங்கரிப்பு நிலையங்கள், நாவிதன்கடைகள், அழகுக்கலை நிலையங்களை நடாத்திச் செல்வதை முறைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல், கண்காணிப்புச் செய்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான நியமத்துணைவிதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆண்டும் உரிமம் வழங்கப்படுவதாக உள்ளூராட்சி அமைச்சின் செயலர் சுட்டிக்காட்டினார்.

இந்த நியமத்துணை விதியின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி வெட்டுதல் கூட எவ்வாறு அமையவேண்டும் என தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதால் அதற்கு அமைவாகவே அனைத்து அழகக நிலையங்களும் செயற்பட முடியும் என ஆளுநரும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நியமத்துணைவிதியை மீறும் அழகக நிலையங்கள் தொடர்பில் அழகக சங்கங்கள் அந்தந்த உள்ளூராட்சிமன்றங்களுக்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் குறிப்பிட்ட ஆளுநர், அதற்கு அமைவாக அத்தகை அழகக நிலையங்களின் உரிமத்தை உள்ளூராட்சிமன்றங்கள் எதிர்காலத்தில் இரத்துச் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அழகக நிலையங்கள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றையும் வழங்கினார். அந்த இலக்கத்துக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டால் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாகவும் சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சின் செயலர் குறிப்பிட்டார்.

சில பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு இவ்வாறுதான் தலைமுடி வெட்ட வேண்டும் என நிர்பந்திக்கின்றனர் என அழகக சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். இதன்போது கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர், சட்டத்தில் இவ்வாறுதான் தலைமுடியை வெட்ட முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மீறினால் அழகக நிலைய உரிமையாளரின் உரிமமே இரத்துச் செய்யப்படும் எனச் சுட்டிக்காட்டியதுடன், பெற்றோருக்கும் இதை தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டார்.

அதேபோல சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதாக நம்பப்படும் அழகக நிலையங்கள் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸாராலும் விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், அழகக நிலைய உரிமையாளர்களுக்கு தெளிவூட்டும் கூட்டங்களை சங்கங்கள் ஒழுங்கு செய்தால் அதில் கலந்துகொண்டு விளக்கமளிக்க தயாராக இருப்பதாக பொலிஸாரும் இதன்போது தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், தொழில் திணைக்களத்தின் பிரதிநிதிகள், சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

  • 328
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads