சினிமா செய்திகள்
அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்
புஷ்பா 2 பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் தனது அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடத் தயாராகி வருகிறார். அவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஒரு
திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்
நேற்று நடந்த ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் திஷா பதானி டான்ஸ் ஆடிய காட்சி கட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல்
இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போக அஜித் காரணமா?
அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், தனுஷின் 'இட்லி கடை' அஜித்துடன் மோத வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் கூறி வந்
வருத்தம் தெரிவித்தார் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக அரசியல் பேசி ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெ
உடலை தானம் செய்வதாக அறிவித்தார் ஷிகான் ஹூசைனி
தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான் ஷிகான் ஹுசைனி. பல படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் கூட விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்
இவர் யார் என்று தெரிகிறதா?
சின்னத்தம்பி படத்தில் குஷ்புவின் இரண்டாவது அண்ணனாக நடித்தவர் இந்த உதய பிரகாஷ் ...இவருடைய இயற்பெயர் மணிகண்டன். இவர் 1964 ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்தவர்.
கே.பாலாஜி
யாருக்கு என்ன சம்பளம் எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் கனக்கச்சிதமாக முடிவு செய்து, யார் மனமும் நோகாமல் உடனுக்குடன் தருபவர் என்றெல்லாம் கே.பாலாஜியை இன்ற
நடிகர் சிவகுமாரின் பியட் கார்
நடிகர் திரு சிவகுமார் அவர்களின் ஆற்காடு தெரு இல்லத்தில், அவர் சுமார் 50 ஆண்டு காலம் பயன்படுத்திய பியட் காரை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.1960 ம் ஆண்
நடிகை மதுரத்தை சமாதானம் செய்த என்.எஸ். கிருஷ்ணன்
புனே ரயில் பயணம்.ஆம் படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அவர்களின் வழிச்
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக லண்டனில் இருந்து சென்னை திரும்பியவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவி
முடி கொட்டி ஆளே மாறிப்போன டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார்.தனது தந்தையை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார் சிம்பு, சிகிச்சைக்கு
நடிகர் மோகன் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
மோகன் உணவகம் ஒன்றில் சந்தித்த பி. வி. கராந்த் என்பவரால் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவரின் முதல் நாடகத்தை தில்லியிலிருந்தும் விமர்சகர்கள் ப
Ads
 ·   ·  2741 news
  •  ·  1 friends
  • 2 followers

மகா கும்பமேளா நிகழ்வில் 300 கிமீ நீள போக்குவரத்து நெரிசல்

கோடிக்கணக்கான பக்தர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளதால், மகா கும்பமேளா செல்லும் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிரயாக்ராஜுக்கு செல்லும் பாதையில் 200-300 கிமீ போக்குவரத்து நெரிசல் உள்ளதால், மத்தியப் பிரதேசத்தின் மைஹார் எல்லையில் உள்ள பொலிஸார், பிரயாக்ராஜ் நோக்கி நகர முடியாது என்று தெரிவித்தனர்.

நெரிசலில் சிக்கித் தவிக்கும் பக்தர்கள் தங்கள் துயரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். பிரயாக்ராஜின் போக்குவரத்து நெரிசல் குறித்த வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர்.

கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக, புனித நீராடுவதற்கு உரிய நேரத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திற்கு பக்தர்கள் செல்ல முடியாமல் நகரமே முடங்கியுள்ளது.

கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரயாக்ராஜ் சங்கம் ரயில் நிலையமும் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, நூற்றுக்கணக்கான வாகனங்கள் சங்கம் சாலையில் வரிசையாக நிற்பதையும், பக்தர்கள் சிரமமின்றி நடமாடுவதற்காக பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியதால், வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்வதையும் காண முடிந்தது.

மகா கும்பாபிஷேகம் ஜனவரி 13 ஆம் திகதி தொடங்கியதில் இருந்து இதுவரை 43 கோடி பக்தர்கள் சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 1.42 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

000

  • 474
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads