சினிமா செய்திகள்
பல வருடங்கள் நாடக அனுபத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை தனது நகைச்சுவை மூலம் சொன்னவ
இணையில்லாத நடிகர் ரங்காராவ்
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
கேப்டன் விஜயகாந்த்  - இயக்குனர் கஸ்தூரி ராஜா சொன்ன தகவல்கள்
நான் இயக்கிய 'வீரம் விளைஞ்ச மண்ணு' படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அவருடைய தனிப்பட்ட குணங்களை இந்தப் படத்தின் மூலம்தான் தெரிஞ்
அஜித்குமாரின் விடாமுயற்சி முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது.
அஜித்குமாரின் சமீபத்திய படம் விடாமுயற்சி பைரசிக்கு இரையாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில், முழு திரைப்படமும் பல திருட்டு வலைத்தளங்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
Ads
 ·   ·  2566 news
  •  ·  1 friends
  • 1 followers

இந்துக்களின் சமர் 3 ஆவது முறையாகவும் யாழ். இந்து வசம்

இந்துக்களின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் , கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் எதிரான 14 ஆவது ‘இந்துக்களின் சமர்’ மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 64 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் (08) முடிவுற்ற இந்த இரண்டு நாள் போட்டியில் 252 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய கொழும்பு இந்து அணிக்கு எஸ். சுபர்ணன் பந்துவீச்சில் அதிரடி காட்டினார். கொழும்பு இந்து அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்களை தாண்டி ஸ்திரமான நிலையில் இருந்தது. ஆரம்ப வீரர் சுரேஷ் குமார் மதுஷேகன் 144 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்று கைகொடுத்தார். என்றாலும் அபாரமாக செயற்பட்ட சுபர்ணன் ஆரம்ப விக்கெட்டுகளை சாய்த்ததோடு மத்திய பின்வரிசையையும் ஆட்டம் காணச் செய்தார்.

குறிப்பாக மத்திய பின்வரிசையில் வேகமாக ஓட்டங்களை சேர்த்து 39 பந்துகளில் 8 பௌண்டரிகளுடன் 39 ஓட்டங்களை பெற்ற சுரேஷ் சார்விஸின் விக்கெட்டை சுபர்ணன் வீழ்த்திய பின் கொழும்பு இந்து அணியின் கடைசி எதிர்பார்ப்பு பறிபோனது.

கடைசியில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி 55.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்றது. சுபர்ணன் 21.5 ஓவர்களில் 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு முதல் இன்னிங்ஸிலும் அவர் 2 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். ஜனசக்தி குழுமத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்த போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸுக்கு 172 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு இந்துக் கல்லூரி அணி 91 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இதனால் முதல் இன்னிங்ஸில் 81 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற யாழ். இந்துக் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களை பெற்று எதிரணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயித்தது.

இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடந்த போட்டிகளில் யாழ். இந்துக் கல்லூரி அணி தற்போது 4௲3 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1980 களின் ஆரம்பத்தில் அறிமுகமாகி 2009 தொடக்கம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஏழு ஆட்டங்கள் சமநிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 386
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads