சினிமா செய்திகள்
அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்
புஷ்பா 2 பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் தனது அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடத் தயாராகி வருகிறார். அவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஒரு
திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்
நேற்று நடந்த ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் திஷா பதானி டான்ஸ் ஆடிய காட்சி கட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல்
இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போக அஜித் காரணமா?
அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், தனுஷின் 'இட்லி கடை' அஜித்துடன் மோத வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் கூறி வந்
வருத்தம் தெரிவித்தார் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக அரசியல் பேசி ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெ
உடலை தானம் செய்வதாக அறிவித்தார் ஷிகான் ஹூசைனி
தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான் ஷிகான் ஹுசைனி. பல படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் கூட விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்
இவர் யார் என்று தெரிகிறதா?
சின்னத்தம்பி படத்தில் குஷ்புவின் இரண்டாவது அண்ணனாக நடித்தவர் இந்த உதய பிரகாஷ் ...இவருடைய இயற்பெயர் மணிகண்டன். இவர் 1964 ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்தவர்.
கே.பாலாஜி
யாருக்கு என்ன சம்பளம் எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் கனக்கச்சிதமாக முடிவு செய்து, யார் மனமும் நோகாமல் உடனுக்குடன் தருபவர் என்றெல்லாம் கே.பாலாஜியை இன்ற
நடிகர் சிவகுமாரின் பியட் கார்
நடிகர் திரு சிவகுமார் அவர்களின் ஆற்காடு தெரு இல்லத்தில், அவர் சுமார் 50 ஆண்டு காலம் பயன்படுத்திய பியட் காரை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.1960 ம் ஆண்
நடிகை மதுரத்தை சமாதானம் செய்த என்.எஸ். கிருஷ்ணன்
புனே ரயில் பயணம்.ஆம் படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அவர்களின் வழிச்
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக லண்டனில் இருந்து சென்னை திரும்பியவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவி
முடி கொட்டி ஆளே மாறிப்போன டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார்.தனது தந்தையை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார் சிம்பு, சிகிச்சைக்கு
நடிகர் மோகன் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
மோகன் உணவகம் ஒன்றில் சந்தித்த பி. வி. கராந்த் என்பவரால் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவரின் முதல் நாடகத்தை தில்லியிலிருந்தும் விமர்சகர்கள் ப
Ads
 ·   ·  2741 news
  •  ·  1 friends
  • 2 followers

இந்துக்களின் சமர் 3 ஆவது முறையாகவும் யாழ். இந்து வசம்

இந்துக்களின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் , கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் எதிரான 14 ஆவது ‘இந்துக்களின் சமர்’ மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 64 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் (08) முடிவுற்ற இந்த இரண்டு நாள் போட்டியில் 252 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய கொழும்பு இந்து அணிக்கு எஸ். சுபர்ணன் பந்துவீச்சில் அதிரடி காட்டினார். கொழும்பு இந்து அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்களை தாண்டி ஸ்திரமான நிலையில் இருந்தது. ஆரம்ப வீரர் சுரேஷ் குமார் மதுஷேகன் 144 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்று கைகொடுத்தார். என்றாலும் அபாரமாக செயற்பட்ட சுபர்ணன் ஆரம்ப விக்கெட்டுகளை சாய்த்ததோடு மத்திய பின்வரிசையையும் ஆட்டம் காணச் செய்தார்.

குறிப்பாக மத்திய பின்வரிசையில் வேகமாக ஓட்டங்களை சேர்த்து 39 பந்துகளில் 8 பௌண்டரிகளுடன் 39 ஓட்டங்களை பெற்ற சுரேஷ் சார்விஸின் விக்கெட்டை சுபர்ணன் வீழ்த்திய பின் கொழும்பு இந்து அணியின் கடைசி எதிர்பார்ப்பு பறிபோனது.

கடைசியில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி 55.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்றது. சுபர்ணன் 21.5 ஓவர்களில் 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு முதல் இன்னிங்ஸிலும் அவர் 2 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். ஜனசக்தி குழுமத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்த போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸுக்கு 172 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு இந்துக் கல்லூரி அணி 91 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இதனால் முதல் இன்னிங்ஸில் 81 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற யாழ். இந்துக் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களை பெற்று எதிரணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயித்தது.

இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடந்த போட்டிகளில் யாழ். இந்துக் கல்லூரி அணி தற்போது 4௲3 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1980 களின் ஆரம்பத்தில் அறிமுகமாகி 2009 தொடக்கம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஏழு ஆட்டங்கள் சமநிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 422
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads