Category:
Created:
Updated:
இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 14 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில், தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யா/மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.
இப்போட்டி நேற்று (07.02.2025) கொழும்பு றேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மகாஜனக் கல்லூரியை எதிர்த்து குருதாகல் மலியதேவ மகளிர் கல்லூரி மோதியது. இப்போட்டி ஆட்டநேர நிறைவில் 1:1 என சமநிலையானது.
வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் மகாஜனக் கல்லூரி 3:2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.